பாரதியார் பாடல்களை பயன்படுத்திவதில் இளையராஜாவுக்கு பிறகு தர்புகா சிவா… ரங்கராஜ் பாண்டே
கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன்..
இவர் தமிழில் ஓரிரு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கன்னட திரை உலகில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளவர்..
இவர் தற்போது, உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.. இந்த வழக்கு 1950 களில் தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகை பரபரப்பாகிய கொலை வழக்காகும்..
இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்..
எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார்..
இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டார்.. அவர் பேசும்போது…

கவிதா பாரதி பேசும்போது நான் அந்த கட்சியை சார்ந்தவன் எங்களுக்கு முரண்பாடு இருப்பதாக சொன்னார்.. ஆனால் நான் அந்த கட்சியும் இல்லை.. அந்தக் கட்சியை கேட்டால் இந்த கட்சி என்பார்கள்.. இந்த கட்சியை கேட்டால் அவர் இந்த கட்சி என்பார்கள்.. ஆக நான் எந்த கட்சியிலுமே இல்லை..
என் நடிப்பை பற்றி லிசி ஆண்டனி புகழ்ந்து சொன்னார்கள்.. ஆனால் அவர்களுடன் நடிக்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது நார்மலாக இருப்பார் ஆக்சன் ரெடி என்று சொன்னவுடன் திடீரென அம்பி ரெமோ போல மாறி மாறி டிரான்ஸ்பார்ம் செய்வார்.. என்னை அவங்க நடிக்கவே விட மாட்டாங்க அனைத்தையும் அவரை செய்து ஸ்கோர் செய்து விடுவார்..

அவருடைய நடிப்பு எனக்கு வியப்பாக இருந்தது நான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது… தம்பி என்னுடைய வீர வரலாறு உனக்குத் தெரியல என்று அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார்..
கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலும் காட்சிகள் ஒரிஜினல் சிறையில் எடுக்கப்பட்டது.. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.. பல கோணங்களில் அவர் காட்சியை படமாக்கினார்..
இந்தப் படத்தின் நாயகன் வெற்றி அவரின் கண்கள் கூட பேசும்… இந்தப் படத்திலும் பிரமோஷனுக்காக நாங்கள் இருவரும் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறோம்… கிட்டத்தட்ட 12 மணி நேரத்தில் 15 சேனல்களுக்கு கதற கதற பேட்டி கொடுத்திருக்கிறோம்… எங்களை இயக்குனர் விடவே இல்லை..
இந்தப் படத்தில் நடித்த போது என்னை கேரவனுக்கே செல்ல விடவில்லை… காரணம் பக்கம் பக்கமாக டயலாக் கொடுத்தார்கள்.. நான் பேப்பரும் பேனா உடன் உட்கார்ந்து இருந்தேன்.. ஆனால் வெற்றி பல பக்க டயலாக்குகளை சர்வ சாதாரணமாக பேசினார்..
இயக்குனர் தயாள் படத்தை எடுக்கும்போது எடிட்டிங் முறையில் எடுத்தார்.. தேவையே இல்லாத காட்சிகள் எடுக்கவே இல்லை.. அதனால் எடிட்டருக்கு பணி குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன்..
தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.. மகாகவி பாரதியார் பாடல்களை எந்த இசையமைப்பாளரும் எளிதாக பயன்படுத்திவிட முடியாது… அதை எளிதாக செய்தவர் இளையராஜா.. அதற்குப் பிறகு தருபுகா சிவா.. பாரதியார் பாடல்களை மிக அழகாக இந்த படத்தில் வடிவமைத்து உயிர் கொடுத்துள்ளார்..
இவ்வாறு ரங்கராஜ் பாண்டே பேசினார்..

