Category: தெரிந்து கொள்ளுங்கள்

  • Kumbh Sandesh Yatra started from Kanyakumari to Haridwar! Yatra will cover a distance of 5,000-kms!

    Kumbh Sandesh Yatra started from Kanyakumari to Haridwar! Yatra will cover a distance of 5,000-kms!

    Kanyakumari (Tamilnadu), Feb 27, 2021:

    Kumbh Sandesh Yatra, aimed at spreading the message on the significance of Kumbh Mela, started here in Vivekananda Centre at Kanyakumari of Tamilnadu on Saturday. The Yatra was flagged off by Swami Chaityananand Maharaj, Vivekananda Ashramam, Kanyakumari and Shri Ponguleti Sudhakar Reddy BJP National Co-Incharge, Tamilnadu State in the presence of several illustrated personalities. Thousand people attended the inauguration ceremony. The 25 days Yatra is being organized by the Gramodaya Chamber of Commerce and Technology (GCOT) will cover 5000 kms before concluding in Haridwar

    BJP national leader Shri Ponguleti Sudhakar Reddy addressed the inaugural ceremony wished for the success of the Yatra. He said he would personally extend assistance to make the Yatra, which was undertaken for the preservation of our cultural traditions, and would also bring it to the attention of Prime Minister Shri Narendra Modi and see to it. The president of Haridwar-based Divya Prema Service Mission, Ashish Gautham said “Started from Kanyakumari, the Rath Yatra will proceed to all four places where the Kumbh Mela is held including Nasik, Ujjain, and Prayagraj and reach Delhi and later to Haridwar”. on this occasion Arigay Ramaswamy memorial services Chairman Sri Arigay Madhu Sudhan announced Rs.10 lakh donation for Mission 5151 and Kumbh Sandesh Yatra.

    Along the route, Kumbh Sandesh Yatra will cover the eight Jyotirlinga kshetras in the country. In addition to the Preparatory journey, the total distance which the Yatra Covers around 7000 km said the organizers’ Mission 5151 team. Delhi Vasanth who was the organizing secretary and founder of GCOT said the Yatra will touch the four major spiritual centers where Kumbh Mela is conducted. “The event also involved reinvigorating ancient Indian practices and shunning the ‘imported’ western practices. Corona has proved that India’s traditional wisdom and folk practices prevailed over western thought. It is now time to wake up and get back to our roots” Mr. Vasanth added.

    The age-old practice of our Sages, Saints, and Rishis from different regions of the country coming to the Kumbh Melas to join together and share their acquired Knowledge and Wisdom to churn out a message in the context of the changing social scenarios is called Kumbh Sandesh. It addresses the requirements in cyclical changes of Biological, Sociological, and All other aspects which may lead the human life. In view of the prevailing pandemic situation in the post-Covid world, we are initiating the Kumbh Sandesh Yatra to emphasise the relevance of the Kumbh Sandesh to civil societies across the world.

    Dr. Ashish Gautam Ji- President, Divya Prem Sewa Mission Sewa Kunj, Haridwar, former Union Minister Shri Pon Radhakrishnan, Shri Santosh Gupta CEO, ISRN, Shri G. Vasudeo Ji Secretary, VK-NARDEP, Shri Nainar Nagendran, Former Minister, Tamilnadu, Dr. Pratap Reddy Hony Chairman, Kumbh Sandesh Yatra have taken part in the flag off event. Mankena Srinivasa Reddy Executive Chairman, Organising Committee, Kumbh Sandesh Yatra, Member, NAEB, Acharya Avinash Rai, National Spokesperson, Kumbh Sandesh Yatra, National Secretary, Bharatiya Jyothish Parishad, organized the inauguration ceremony. Representatives of NGOs like Gramium Trust, Flower trust, Ivanjilin trust, Kirubai trust, Udavum karangal trust have participated.

    Preparatory Journey of Yatra:
    Kumbh Sandesh Yatra preparatory journey (Sannahaka yatra) was flagged off by MLC and Telangana Jagruthi president Kalvakuntla Kavita in Hyderabad along with Planning Commission Deputy Chairman B. Vinod Kumar on 19th February. Kumbh Sandesh Yatra is being carried out to inform the future generation about the culture and tradition of our country and to be implemented across the world. Thereafter the preparatory journey went through the pilgrimages off both Telugu states like Srisailam, Vijayawada, Tirupati to reach out to Kanyakumari. Many organizations including Hyderabad-based MASS Organisation, Bharateeyam Foundation, JD Foundation and Impact Foundation, Divya Prem Seva Mission of Haridwar, Indian Social Responsibility Network of Delhi, ARMS, Visakha group are supporting the cultural expedition.

  • ஜெயலலிதா பிறந்தநாள்! கவிதை வடிவில் அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்!

    ஜெயலலிதா பிறந்தநாள்! கவிதை வடிவில் அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்!

    எல்லா விதைகளும்
    விருட்சம் ஆவதில்லை
    விருட்சங்கள் எல்லாம்
    நிழல் தருவதில்லை…
    எங்களின் போதி மரமே!
    உங்களை வணங்குகிறேன்…

    வேதா இல்லம்
    எங்கள் முகவரி மட்டுமல்ல;
    இந்த தேசத்தின் முகவரி!

    வீரம் உங்களிடம்
    விலாசம் கேட்கும்
    விவேகம் உங்களிடம்
    யாசகம் கேட்கும்…

    மக்களால் நான்;
    மக்களுக்காகவே நான்…
    வெறும் வார்த்தையல்ல,
    வாழ்க்கை!

    “இதய தெய்வம்”
    உதடுகளின் வார்த்தையல்ல
    உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று!

    எதிர்ப்பவர்களுக்கு
    நீங்கள் சிம்ம சொப்பனம்;
    எளியோர்கள் அமரும் அரியாசனம்.

    கோபுரங்களைக் காட்டிலும்
    குடிசைகளை விரும்பியவர்
    நீங்கள். ஆதலால் தான்
    அனைவருக்கும் என்றென்றும்
    நீங்களே இதய தெய்வம்!

    மகமே! எங்கள் ஜெகமே!!
    உங்களை நினைக்காத
    நாளில்லை…
    மறந்தால் நாங்கள்
    நாங்களில்லை…

    நீங்கள் ஆள வேண்டுமென
    சொன்னதைக் காட்டிலும்
    இன்னமும்
    நீங்கள் வாழ வேண்டுமென
    நாங்கள்
    சொல்லியிருக்க வேண்டும் அம்மா!

    ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களுக்கு சிறந்த நாளாக அமையும், உங்கள் பிறந்த நாள் இந்த தேசத்திற்கே சிறந்த நாள்!

    அம்மா! இந்த
    மூன்றெழுத்தில்
    என் மூச்சிருக்கும்…
    அது முடிந்த பின்னும்
    ஒலிக்கும் வார்த்தை
    அம்மா! அம்மா!! அம்மா!!!

    உங்கள் பாதையில் எங்கள் பயணம் என்னாளும் தொடர ஆசீர்வதியுங்கள்
    அம்மா!!!

    இப்படிக்கு,
    அம்மாவின்
    உண்மை விசுவாசி
    டி.ஜெயக்குமார்

  • அமேசானில் வெளியாகும் ஆந்தாலஜி மூவிஸ்

    அமேசானில் வெளியாகும் ஆந்தாலஜி மூவிஸ்


    வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான

    புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.

    அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

    மும்பை, இந்தியா, செப்டம்பர் 30, 2020 – வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்திருக்கிறது. இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் –

    இளமை இதோ இதோ – சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.

    அவரும் நானும்/ அவளும் நானும் – கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.

    காஃபி, எனி ஒன்? – சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.

    ரீயூனியன் – ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    மிராக்கிள் – கார்த்திக் சுப்புராஜ் (பேட்டை) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்டை), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.

    நிஷப்தம், பென்குயின், பொன்மகள் வந்தாள் போன்ற பல தமிழ் படங்கள் மற்றும் அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்றவற்றின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.

    புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்’ போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.

    “நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது, மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

    ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் இந்த புதிய வெளியீடுகளும் சேரப் போகிறது. இந்த பட்டியலில் அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

    ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் இந்த எல்லா படங்களையும் எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள்மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    அமேசான் பற்றி
    அமேசான் நான்கு கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது: போட்டியாளர்களை விட வாடிக்கையாளர்களின் மேல் கவனம் செலுத்துவது, புதிய கண்டுபிடிப்பு மீதான ஆர்வம், சிறப்பான செயல்படுவதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தல் மற்றும் நீண்டகால சிந்தனை. வாடிக்கையாளர் மதிப்புரைகள், 1- க்ளிக் ஷாப்பிங், தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், ப்ரைம், அமேசானால் பூர்த்தி செய்தல், ஏ.டபிள்யு.எஸ், கின்டில் டைரக்ட் பப்ளிஷிங், ஃபயர் டேப்லெட்டுகள், ஃபயர் டிவி, அமேசான் எக்கோ மற்றும் அலெக்சா ஆகியவை மூலம் அமேசான் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் முன்னோடியாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு, aboutamazon.in ஐப் பார்வையிட்டு @AmazonNews_IN ஐப் பின்தொடரவும்.

    சமூக உடக தொடர்புகளுக்கு:
    @PrimeVideoIN

    பொது தொடர்புகளுக்கு:
    himalee@amazon.com
    pv-in-pr@amazon.com

  • 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

    50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

    *50-வது ஆண்டில் சரவணா ஸ்டோர்ஸ்… ‘மக்களின் இதய மாளிகையில் இடம் கொடுத்தத்தற்கு நன்றி’*

    “நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனைகளை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் இன்று தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது இந்நிறுவனம்.

    தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களை காண்பதரிது. நடுத்தர மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வாங்கிச்செல்லும் துணிகள் மட்டுமல்லாமல், அதை எடுத்து செல்லும் பை மூலமாக அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.

    90களிலிருந்து ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலை மோதுவதற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, நம்பிக்கை. தி.நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பு எண்ணில் அடங்காதது. பல ஊர்களில் இருந்து தேனீக்கள் போல மக்கள் சோறு கட்டிக்கொண்டு திருவிழா போல் இந்த கடைக்கு வந்து செல்வது கண்கொள்ளா காட்சி.

    வியாபாரயுக்தியும், உழைப்பும் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் நியாயமான விலையில் ஒரே இடத்தில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

    இந்த பொன்விழா ஆண்டில் பொன்னான நேரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் மக்களுக்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினரான சண்முகசுந்தரம் ராஜரத்தினம், ராஜரத்தினம் சபாபதி மற்றும் குழுமத்தினர் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இதய பூர்வமாக நன்றியை சமர்பிக்கிறார்கள்.

    Thanks And Regards
    *Kumaresan PRO*
    *K Media Relations*

  • ஊரடங்கு  காலத்தில் உதவிகளை வாரி வழங்கும் தேவரகொண்டா அறக்கட்டளை!

    ஊரடங்கு காலத்தில் உதவிகளை வாரி வழங்கும் தேவரகொண்டா அறக்கட்டளை!

    உலகம் முழுவதும் ‘கொரோனா’ நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார். அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் ஒரு தனித்துவ முயற்சியை மேற்கொண்டார்.

    விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது. மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண நிலையை எதிர்கொள்ள மட்டுமே முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது. எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    அடிப்படையில் நடுத்தர குடும்பதை சேர்ந்த விஜய் தேவர்கொண்டாவுக்கும், அப்படிப்பட்ட குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், போராட்டங்களையும் நன்கறிந்தவர் என்பதால், இந்த நெருக்கடி காலகட்டத்தில் அவர்களுக்கு தோள்கொடுக்க மற்றொரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அதை விட அவர் இந்த திட்டத்தை அறிவித்தவுடன் நன்கொடையை வாரி வழங்கி அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொதுமக்கள் காண்பித்தது அவரது உத்வேகத்தை மேலும் அதிகரித்தது என கூறலாம்.

    அந்த நம்பிக்கையே அவர்கள் அளித்த பணத்தில் இம்மியளவு கூட வீணாகிவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியை இந்த அறக்கட்டளைக்கு அதிகரிக்க செய்தது. அதன் காரணமாக நன்கொடைகளை கையாளும் விதத்தை மிக கவனத்துடன் வடிவமைத்தது இந்த அறக்கட்டளை. அறக்கட்டளையிடம் உதவி கோரிய ஒவ்வொரு குடும்பத்தினரின் பின்னணி மற்றும் விவரங்களை சரி பார்த்து உறுதி செய்த பின்னரே உதவி செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளையானது தாங்கள் உதவுவதோடு நிறுத்தி கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உதவ வலியுறுத்தியதுடன் சுமார் 535 தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைத்து பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெற்றிகரமாக உதவ துணை புரிந்துள்ளது.

    அறக்கட்டளையின் இந்த தீவிர செயல்பாடும், அதில் விஜய் தேவர்கொண்டா காண்பித்த ஈடுபாடும் பல குடும்பங்களை நெருக்கடியிலிருந்து மீட்க உதவியுள்ளது. எந்தவித எதிர்பார்ப்பையோ, புகழ் வெளிச்சத்தையோ எதிர்பாராமல் நடுத்தர வர்க்கத்திற்குப் பக்கபலமாக நின்ற அவரது இந்த பண்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

    பெரும்பாலும் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்து வந்த தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு உதவியதன் மூலம் அளப்பறிய பணியை இந்த அறக்கட்டளை ஆற்றியுள்ளது,ம். நிதிகளை கையாண்டதில் வெளிப்படை தன்மை மற்றும் திட்டமிட்டு செயல்பட்டதன் மூலம் இந்த அறக்கட்டளையும், விஜய் தேவர்கொண்டாவும் அனைவரின் பாராட்டுதல்களை மட்டுமல்லாமல் இதயங்களையும் வென்றுள்ளனர்.

    இது இத்துடன் முடிந்து விடவில்லை, இந்த நற்பணியைத் தொடர விரும்பும் விஜய் தேவர்கொண்டா மேலும் பல நலத்திட்டங்களை வரும் நாட்களில் அறிவிப்பார்.

  • சக ஊழியர்களை மறவாத ஆர்ட் டைரக்டர் கிரண்!

    சக ஊழியர்களை மறவாத ஆர்ட் டைரக்டர் கிரண்!


    பதவியை எதிர்பார்த்து உதவி செய்வது அரசியலில் சாதாரணம். எதையும் எதிர்பாராமல் சக மனிதனுக்கு உதவுவது தான் என்றைக்கும் அசாதாரணமாக இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பால் உலகம் மிகப்பெரிய இன்னலைச் சந்தித்து வருகிறது. மேலும் அமைப்பு சாரா தொழிலார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தப் பாதிப்பு சினிமாத் தொழிலார்களையும் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் பெப்ஸி தொழிலார்கள் இந்தக் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.

    அவர்களின் துயர் துடைக்க பல்வேறு கலைஞர்கள் உதவிகளை வழங்கி வரும் இவ்வேளையில் பெப்ஸியின் சக ஊழியராக இருந்து இன்று ஆர்ட் டைரக்டராக உயர்ந்திருக்கும் கிரணும் தன்னால் முடிந்த 25 ஆயிரம் ரூபாயை பெப்ஸி ஊழியர்களுக்காகக் கொடுத்துள்ளார்.

    மேலும் தன்னிடம் உதவியாளர்களாக இருந்தவர்களுக்கும்,ஓய்வு பெற்றுள்ள சீனியர் கலைஞர்களுக்கும் உதவும் பொருட்டு ₹35 ஆயிரம் வழங்கியுள்ளார். இவர் காப்பான் குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்தவர். மேலும் இவர் நடிகராகவும் பரிணமித்து வருகிறார். அவருக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

  • கொரோனா நிவாரணம் அள்ளி வழங்கிய அஜித்!

    கொரோனா நிவாரணம் அள்ளி வழங்கிய அஜித்!

    “நம்ம கூட இருக்குறவங்களை நம்ம பார்த்துக்கிட்டா நம்மை மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்பது தல வீரம் படத்தில் சொன்ன டயலாக். படத்தில் சொன்னதை நிஜத்திலும் செய்திருக்கிறார் அஜித்குமார். கொரோனா தொற்றால் நம் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் இந்நேரத்தில் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் சினிமாத் தொழிலார்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பெப்ஸி அமைப்புக்கு 25 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இரண்டிற்கும் தலா இரண்டரை லட்சமும், பி.ஆர் ஓ யூனியனுக்கு இரண்டறை லட்சமும் வழங்கியுள்ளார்.

  • ரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் நடந்தது என்ன… Exclusive report!

    ரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் நடந்தது என்ன… Exclusive report!