Category: திரை விமர்சனம்

விமர்சனம்

  • ஒன்ஸ் மோர் – விமர்சனம்….

    ஒன்ஸ் மோர் – விமர்சனம்….

    ஸ்டோரி…

    காதல் தோல்வியால் இருக்கிறார் நாயகன் அர்ஜுன் தாஸ்.. இவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் காலேஜ் ஜூனியர் அதிதி சங்கர்.. முதலில் அவரை வெறுக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஓகே சொல்கிறார்..

    இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்போது திடீரென முன்னாள் காதலியின் அழைப்பு வருகிறது.. இவரை சந்திக்க வேண்டும் என்கிறார்.

    அதன் பிறகு அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்.? யாரை திருமணம் செய்து கொண்டார்.? என்பதுதான் திரைக்கதை..


    கேரக்டர்ஸ்…

    அர்ஜுன் தாஸ் — ரகுவரன்
    அதிதி சங்கர் — அஞ்சலி
    சோனா ஒலிக்கல் — இந்திரா வாசுதேவன்

    இடைவேளை வரை சோகமாக பிறகு ஜாலியாக இருக்கிறார் அர்ஜுன் தாஸ்… ஆனால் ஜாலி கேரக்டரை விட சீரியஸ் கேரக்டருக்கு இவர் தன்னை பக்காவாக பொருத்தியிருக்கிறார்.. பெரும்பாலும் இவரது படங்களில் சீரியஸ் கேரக்டர் தான் இவருக்கு கை கொடுக்கிறது.. ஸ்டுடென்ட் கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் இளமையாக காட்டி இருக்கலாம்.. அதை தலை முடி தாடி…

    சந்தோஷ் சுப்பிரமணியன் ஜெனிலியா போல துறுதுரு கேரக்டரில் அதிதி சங்கர்.. அர்ஜுனை விரட்டி விரட்டி காதலிக்கிறார் காதலுக்காக உருகுகிறார் காதலுக்காக ஏங்குகிறார்.. இப்படி ஒரு லவ்வர் கிடைத்தால் நாம் காதலிக்காமல் இருப்போமா.? ஆனாலும் இவரை முதலில் வெறுக்கிறார் அர்ஜுன்..

    சோனா ஒலிக்கல்.. மற்றொரு ஹீரோயினாக இவர்.. அழகாக வருகிறார்.. அருமையாக கவிதையாக பேசுகிறார்.. ஆனால் இவர்களின் காதல் முறீவுக்கு என்ன காரணம் அழுத்தம் இல்லை…

    டிராவிட் செல்வம் — இப்ராஹிம்
    அனுஷா பிரபு — சாரா
    ஜகபர் — கீகீ
    மோனிஷ் எலமாரன் — ஸ்ரீநாத்
    வர்ணிகா வரத் — வர்ணிகா
    பிலிப்சன் தாமஸ் — பிலிப்
    அருண்குமார் மணி — முத்து
    சௌந்தர்யா மனோகரன் — சௌந்தர்யா
    கண்ணன் டி — திவாகர்
    ரிச்சி ரிச்சர்ட்சன் — கெவின்
    ரக்ஷா செரின் — அனு
    ஸ்ரீகாந்த் — மோஜ்
    நியாஸ் முஹம்மது — நியாஸ்
    சித்ரா லட்சுமணன் — பாடக லிங்கம்
    தேவதர்ஷினி சேதன் — தெரபிஸ்ட் லாவண்யா
    ஜென்சன் திவாகர் — ஃபாதர் எட்வின்
    தயாளன் — ரகுவின் தந்தை
    மகேஸ்வர் — அஞ்சலியின் தந்தை
    ரமா ராஜேந்திரா — ரகுவின் தாய்
    லட்சுமி சரவணன் — அஞ்சலியின் தாய்
    சுதர்சன் காந்தி — குருபரன்
    ஆரீஷ் — கிக்கியின் காதலன்
    குட்நைட் ஆர். நாகராஜன் — குமரன்
    ரித்திக் கிருஷ்ணா — கேரளா தன்னார்வலர்
    பூஜா சுரேந்தர் — இந்திராவின் தாய்
    நிர்மல் குமார் — இந்திராவின் தந்தை
    அபிரா பிரவீன் — இளம் இந்திரா
    ஹரிகுமார் — மெக்கானிக்
    சோமசூர்யா — உதவி மெக்கானிக்

    இத்தனை நடிகர்கள் இருந்தாலும் இவர்களின் கேரக்டரில் எந்த தாக்கமும் இல்லை.. சர்ச் பாதிரியாராக வரும் திவாகர் கேரக்டர்.. பரிதாபங்கள் டிராவிட் கேரக்டர் முற்றிலும் வீணடிக்கப்பட்டுள்ளது..

    டெக்னீசியன்ஸ்…

    எழுதி இயக்கியவர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
    தயாரிப்பாளர் : யுவராஜ் கணேசன்
    தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்
    இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
    DOP: அரவிந்த் விஸ்வநாதன்
    எடிட்டர்: நாஷ்
    கலை : ராஜ் கமல்
    பாடல் வரிகள்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
    ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், எம்.சரவண குமார்
    ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்
    நடன இயக்குனர்: அப்சர்
    தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: A .பாலமுருகன்
    தயாரிப்பு நிர்வாகி: R. நாகராஜன்
    தயாரிப்பு மேலாளர்: D பிரசாந்த், D பார்த்திபன்
    விளம்பர வடிவமைப்புகள் : கௌதம் j
    ஸ்டில்ஸ் : மணியன்
    நிர்வாகத் தயாரிப்பாளர்: ஹரிஷ் துரைராஜ்
    கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் எம்.பி
    மக்கள் தொடர்பு : யுவராஜ்

    இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
    DOP: அரவிந்த் விஸ்வநாதன்
    எடிட்டர்: நாஷ்

    படத்தின் மிகப்பெரிய பலம் இசை பாடல்கள் பின்னணி இசை என்ற சொல்லலாம்.. அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கலாம் என ஆசையை தூண்டும்..

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல் கொள்ளை அழகு..

    எழுதி இயக்கியவர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்… கிட்டத்தட்ட முக்கோண காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. முன்னாள் காதலி இந்நாள் காதலி எனக்கு கதையை நகர்த்து இருக்கிறார்.

    எப்போதும் காதல் முடிவுக்கு ஒரு வலுவான காரணங்கள் இருக்கும் ஆனால் இதில் அர்ஜுன் & சோனா இவர்களின் காதல் ஏற்படும் போதும் முறியும் போதும் வலுவான காரணம் இல்லை..

    கவிதை கவிதையாக பேசுகிறார்.. இப்படியாக பல காட்சிகளை சீரியல் போலவே காதலர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. முக்கியமாக அர்ஜுன் தாஸ் குரல் கம்பீரம் என்றாலும் டப்பிங் நிதானித்து பேசி இருக்கலாம் பெரும்பாலான வசனங்கள் புரியவில்லை..

  • TOXIC – விமர்சனம்

    TOXIC – விமர்சனம்

    கதை…

    1947 ஆம் ஆண்டு கோவாவில் கதை தொடங்குகிறது.. நயன்தாரா அக்கா.. தம்பி யாஷ். இவர்கள் இருவரும் டான்.. இன்னும் பெரிய டானாகி எல்லாரையும் அடிபணியவே வைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.. அங்குள்ள ஒரு பெரிய டானின் மகளை திருமணம் செய்ய நினைக்கிறார்.

    அந்த சமயத்தில் அங்கு சர்க்கஸ் கம்பெனி நடத்தும் கியாரா மீது காதல் காமம் கொள்கிறார்.. தம்பியின் காதலுக்கு அக்கா நயன்தாராவும் ஆதரவு தருகிறார்.. இதனால் டானுக்கும் யாசுக்கும் பிரச்சனை..

    இப்படியாக கதை தொடங்கி.. எங்கெங்கோ செல்கிறது ல்.. எங்கெல்லாம் செல்கிறது என்பது இயக்குனருக்கு தான் தெரியும்..

    குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் கீது மோகன் தாஸ்.. நளன் தமயந்தி யில் நாயகியாக நடித்திருந்தார்.. இந்த படத்தை இயக்கியவர் கீது.. கே ஜி எஃப் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் மாபெரும் புகழ்பெற்றவர் யாஷ்.. எனவே அவரை வைத்து அதேபோல கதையை கொடுக்க நினைத்திருக்கிறார் கீது.. ஆனால் கதை… என்ன.?

    நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள்

    அக்கா தம்பி பாசத்தை காட்ட நினைத்து மாஃபியா வாழ்க்கையை காண்பித்து… காணும் அழகான பெண்களை எல்லாம் தன் காம வலையில் வளைத்து வளைத்து யாஷ் ஆட்டம் போடுகிறார்.. ஒரு பிரம்மாண்டமான ஆபாச படத்தை காட்டுவது போலவே பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது..

    தந்தை ராயா மற்றும் மகன் ரூமி என்ற கதாபாத்திரங்கள் கதையின் மையம்..

    யாஷ், நயன்தாரா, கியாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஒரு லிட்டர் பலர் நடித்திருக்கின்றனர் இதில் நயன்தாராவின் கேரக்டர் இடைவேளை இடம் முடிந்து விடுகிறது.. ருக்மணி & கியாரா இருவரும் அழகிலும் கவர்ச்சியிலும் கலக்கி இருக்கின்றனர்..

    ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்..

    விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன..

    சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது..

  • அமரம் – விமர்சனம்…

    அமரம் – விமர்சனம்…

    திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் ‘அமரம்’

    கதை…

    ராஜன் தேஜஸ்வர் (அருகன்)
    ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி)

    ஜார்ஜ் மரியம் ஒரு கூலிப்படைத் தலைவன்.. இவரது உறவுக்கார பையன் நாயகன்.. ஒரு கட்டத்தில் நாயகியின் தந்தையை இவர் கொலை செய்ய இவருக்கு வேலை வருகிறது. நாயகன் தன் தந்தையை கொடூரமான முறையில் கொல்வதை பார்த்து விடுகிறார் நாயகி ஐரா.

    இதனையடுத்து தானே அவனை பழிவாங்க வேண்டும் கொல்ல வேண்டும் என முயற்சிக்கிறார்..

    அவரின் முயற்சி பலித்ததா என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

    நடிகர்கள்…

    ராஜன் தேஜஸ்வர் (அருகன்)
    ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி)
    ஜார்ஜ் (மொசாட்)

    நீண்ட தலை முடி நீண்ட தாடி என முகம் முழுவதும் தன்னுடைய முகபாவனைகளை முழுவதுமாக மறைத்து விட்டார் நாயகன். காட்டுவாசி என்று சொல்லப்பட்டாலும் அதற்கான உடல் மொழி பெரிய அளவிலில் இல்லை… ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார் நாயகன்..


    கதையின் நாயகனாக இடைவேளை வரை பயணிக்கிறார் ஜார்ஜ் மரியம் இவரது கேரக்டர் படத்திற்கு கூடுதல் பலம்..

    நாயகி அயிரா.. கேரக்டரிலும் பெரிய வலு வில்லை நடிப்பிலும்…

    சாய் தீனா (விஜயன்)
    நாகிநீடு (ஏகலைவன்)
    கல்கி ராஜன் (பாண்டு)
    ஹரிஷ் பெராடி (சால்வா)
    வாசுதேவன் முரளி (தயா).

    தொழில்நுட்ப கலைஞர்கள் :

    பாடல்கள் – சௌந்தரராஜன். K

    ஒளிப்பதிவு – பரத் குமார்

    எடிட்டிங் – R. ஸ்ரீராமர்

    கலை இயக்கம் – ஜனார்த்தனன்

    ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்

    நடனம் – பூபதி

    தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி

    மக்கள் தொடர்பு –
    சதீஷ் குமார்,
    புவன் செல்வராஜ்

    தயாரிப்பு – C.R.ராஜன்.

    Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

    ஒளிப்பதிவாளர் பரத் குமார்.. இதுவரை திரையில் காட்டப்படாத கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்..

    இசை – மிக்கி ஜெ .மேயர்.. ஒட்டாரத்தி பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை மிரட்டல்..

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா.. வழக்கமான பழிவாங்கல் கதை ஆனால் படத்தில் மேக்கிங் உயர்வாக இருந்தாலும் படத்தின் பட்ஜெட் குறைவாக உள்ளது.. தந்தையை ஏன் கொன்றார் என்பதற்கான காரணம் படத்தில் கடைசி வரை இல்லை.. அதை நாயகி அறிந்து கொள்ள வாய்ப்பு படத்தில் இல்லை..

  • இன்சிடியஸ் – அவுட் ஆஃப் தி ஃபர்தர் விமர்சனம்

    இன்சிடியஸ் – அவுட் ஆஃப் தி ஃபர்தர் விமர்சனம்

    இன்சிடியஸ் தொடர் பட வரிசையில் வந்திருக்கும் ஆறாவது படமாகும். ஆனால், ஒரு தனிப்படமாகவும் இதைப் பாவிக்கலாம். முந்தைய படங்களைப் பார்த்தே இருக்கவேண்டிய அவசியமில்லை.

    ஃபர்தர் என்பது இறந்தவர்கள் வசிக்கும் இடமாகும். ஃபர்தருக்கும் பூமிக்கும் பயணிக்கக்கூடிய சக்தியைப் பெற்றவராக கெம்மா இருக்கிறார். அவரால் ஃபர்தரில் இருந்து ஒரு பொருளைப் பூமிக்கும், பூமியில் இருந்து ஒரு பொருளை ஃபர்தருக்கும் கொண்டு செல்ல முடியும். இதை அறிந்து கொள்ளும் ஃபர்தரில் வாழும் சைரஸ் எனும் கொடும் ஆத்மா, கெம்மாவின் உதவியோடு தன் பின்தொடர்பாளர்களுடன் பூமிக்கு நிரந்திரமாக வர நினைக்கிறது. அதனால் சைரஸ், கெம்மாவை ஆட்கொள்கிறது. எப்படி அதிலிருந்து கெம்மாவும், அவரது மகள் மாயாவும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

    துர்கனவுகளால் பாதிக்கப்படும் கெம்மாவிற்கு உதவியாக எலைஸ் எனும் பாத்திரத்தில் லின் ஷயே நடித்துள்ளார். “இதைத்தான் நான் செய்கிறேன்” என ஃபர்தரில் இருந்து கொண்டு, சைரஸ்க்கு எதிராகக் கெம்மாவிற்கு உதவும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பூமியில் எலைஸின் குரலாக டேட்டூ கடை நடத்தும் க்ளேர் எனும் பெண் உதவுகிறாள். க்ளேராக மெய்ஸி ரிச்சர்ட்ஸன் நடித்துள்ளார். கெம்மாவாக அமெலியா ஈவ் நடித்துள்ளார். இம்மூவரின் சிறப்பான ஒருங்கிணைப்பால், இறந்த பின்பும் ஒரு கல்ட் லீடராக வலம் வரும் சைரஸின் தீய நோக்கம் சாமர்த்தியமாகத் தகர்க்கப்படுகிறது.

    இந்தப் படத்தை, பேய்ப்படம் என்று சொல்வதை விட, தன் மகளுக்கு ஓர் ஆபத்து நேரும்போது எப்படி அம்மா தன் மகளைப் பாதுகாக்கிறார் என்ற எமோஷநல் கனெக்ட்டை அதிகம் கொண்டுள்ள படமெனச் சொல்லலாம். முதல்முறையாக இன்சிடியஸ் படத்தொடரின் படத்தை இயக்கியுள்ளார் ஜேக்கப் சேஸ். இதுவரை வெளியான ஐந்து இன்சிடியஸ் படங்களின் புகழுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இப்படத்தைக் கரையேற்றி விடுகிறார். ஹாரரையும் எமோஷன்ஸையும் இணைக்கும் நேர்த்தியான கலவையாக இன்சிடியஸ் அசரடிக்கிறது.

  • இருமுடி கட்டு – விமர்சனம் 4/5…

    இருமுடி கட்டு – விமர்சனம் 4/5…

    கதை…

    சபரிமலை ஐயப்பன் முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் நாயகன் ரவி தேஜா… அதே சமயத்தில் தன் குடும்பம் மீதும் மகள் மீதும் பாசம் கொண்டவர்.. ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தன் மகளாக நினைப்பவர்.. யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அடிதடியில் இறங்கி விளையாடுபவர்..

    இவரிடம் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் சபரிமலைக்கு மாலை போடும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் குடி குடி குடி.. மதுபானம் தான் இவரது பலவீனம்..

    இந்த நிலையில் இவருக்கு எதிராக சதி திட்டத்தை தீட்டுகிறார் வில்லன்.. அவர் சபரிமலைக்கு மாலை போடும் நாட்களில் சாந்தமாக இருப்பார் என்பதால் அந்த நாட்களில் அவரை கொல்ல திட்டமிடுகிறார்..

    அப்போது என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை..


    நடிகர்கள்…

    Ravi Teja – Lead role
    Priya Bhavani Shankar – Female lead
    Sai Kumar – Important role
    Baby Nakshathra – Ravi Teja’s daughter
    Ajay Ghosh – Supporting role
    Ramesh Indira – Supporting role
    Swasika – Supporting role

    வழக்கமான தெலுங்கு கமர்சியல் பாணியில் வந்திருக்கும் ஒரு படம் இது.. ரவி தேஜாவில் ஆக்சன் வரிசையில் இந்த படமும் இணையும்.. மகள் மீது பாசம்.. எதையும் செய்யும் துணிச்சல் என அசத்தியிருக்கிறார்.. மாலை போட்டு இவர் ஆடும் ஆட்டங்களும் ரசிக்க வைக்கிறது..

    ப்ரியா பவானிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் தெலுங்கு இல்லத்தரசியாக கவருகிறார்.. அதே சமயம் மகளை இழந்து தவிக்கும் காட்சிகளை நம்மையும் ஆட வைக்கிறார்..

    அஜய் கோஸ்.. ரமேஷ் இந்திரா உள்ளிட்டோரின் நடிப்பு மிரட்டல்.. குருசாமியாக வரும் சாய் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.. ஆனால் இவருடைய கேரக்டர் எதிர்பாராத திருப்பம்..

    ரவி தேஜாவின் மகளாக நடித்த நட்சத்திராவும் அப்பாவுக்கு நிகராக பாசம் காட்டுகிறார் அக்காள் மீது மரியாதை வைத்திருக்கிறார்.. இவரது முடிவு எதிர்பாராத ஒன்று..

    வில்லி ஸ்வாசிக்கா மிரட்டலான நடிப்பை கொடுத்திருகிறார்.

    டெக்னீசியன்ஸ்

    Director: Shiva Nirvana
    Producers: Naveen Yerneni, Y. Ravi Shankar

    Music Director: G. V. Prakash Kumar
    Cinematography: Vishnu Sarma
    Editor : Prawin Pudi

    Art Direction: Bhargava Noundla
    Action Choreographers: Ram-Lakshman, Real Satheesh
    Choreographers: Baba Baskar, V. J. Shekar
    Costume Designer: Rajesh Kamarsu
    Makeup: I. Srinivasa Raju

    ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.. சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு அவர் போடும் மெட்டு இனி அடிக்கடி கேட்க தூண்டும்..

    ஒளிப்பதிவும் படத்தொகுப்பம் கச்சிதம்..

    குடும்ப செண்டிமெண்ட்… மகள் பாசம்.. ஆன்மீகம்… பாலியல் தொல்லை… அரசியல்வாதியின் அதிகார திமிரு என அனைத்தும் கலந்து கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வானா..

    Irumudi Kattu movie review

  • மொத ராத்திரி – விமர்சனம்..

    மொத ராத்திரி – விமர்சனம்..

    கதை…

    நாயகன் ரிஷிகாந்துக்கு காதல் தோல்வி.. எனவே ஊரை விட்டு துபாய்க்கு செல்கிறார்.. சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார்… அப்போது அவருக்கு தெரியாமல் திடீரென திருமண ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வைக்கின்றனர்.. நாயகி அனிஷ்மாவுடன் திருமணமும் நடக்கிறது… முதல் இரவு அன்று தன் பழைய காதலனுடன் ஓடிவிடுகிறார் நாயகி அனிஷ்மா..

    அதன் பிறகு என்ன நடந்தது.. நாயகன் என்ன ஆனார்.? அவரின் நிலை என்ன.? நாயகி நிலை என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை…

    நடிகர்கள்….

    மருது கேரக்டரில் நாயகன் ரிஷிகாந்த்.. எளிமையான உணர்வுகளை எதார்த்தமாக கடந்து செல்கிறார்.. முதலிரவு அன்று மனைவி ஓடிப் போனால் மணமகனின் நிலை என்ன என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்…

    அழகும் திறமையும் நிறைந்த நடிகை அனிஷ்மா.. ஏற்கனவே சிறை மற்றும் யூத் திரைப்படங்களில் ரசிகர்களை ஈர்த்து அனிஷ்மா இதிலும் அழகாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.. வசனங்களை பேசாமல் கண்களால் பேசி உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்..

    சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளனர்..

    தொழில்நுட்ப கலைஞர்கள்…

    ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி.. திருமண வீட்டு கலாட்டாக்களை சுவாரசியமாக படமாக்கி இருக்கிறார்..

    பரத் சங்கரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் ஒன்றி பயணிக்கிறது.

    திருமண உறவு.. முதலிரவு.. உறவினர்கள்.. நண்பர்கள் என குடும்ப திருவிழா போல கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.. பல இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கிறார்..

    ஒரு நாளில் நடக்கும் கதையை சுவாரசியமாக குடும்பப் பின்னணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்… திருமணம் முதலிரவு என வித்தியாசமான கதைகளத்தோடு படத்தை கலகலப்பாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி..

    Modha Rathri movie review

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்..

    பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்..

    கதை…

    சான்வீயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் இளன்.. பின்னர் நாயகனின் மனதை புரிந்து கொண்ட நாயகியும் காதலிக்க இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்..

    திருமணம் முடிந்த உடன் அதுவரை சொல்லாத நிபந்தனை விதிக்கிறார் நாயகி சான்வீ.. என் பெற்றோரை பிரிந்து உன் வீட்டிற்கு வர முடியாது… நீ உன் பெற்றோரை பிரிந்து என் வீட்டிற்கு வந்துவிடு என கணவனிடம் கட்டளையிடுகிறார்..

    அதன் பிறகு என்ன நடந்தது.? மாமியார் வீட்டில் மருமகன் குடும்பம் நடத்தினாரா.? மனைவி சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான கல்யாண கலாட்டா…

    நடிகர்கள்…

    இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்..

    எதார்த்த நாயகனாக இளன்.. ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதிலும் ஒரு பெண்ணை கவர்ந்து இழுப்பதிலும் இளன் ஸ்கோர் செய்து இருக்கிறார்… மாமியார் வீட்டில் சிக்கிக்கொண்ட மருமகன்.. எலிப்பொறியில் சிக்கிய எலி போல நடிப்பில் செம..

    ஏற்கனவே குடும்பஸ்தன் திரைப்படத்தில் நம்மை கவர்ந்த சான்வீ இந்தப் படத்திலும் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.. நூடுல்ஸ் சிக்கல் சிகை அலங்காரம்.. அழகிய கண்கள்.. கவர்ச்சியான உடல் எனக் காந்தமாய் கவர்ந்து இருக்கிறார்…

    கடந்த வாரம் விசுவநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிப்பில் மிரட்டி இருந்த ராதிகா இந்த படத்திலும் கலக்கி இருக்கிறார்..

    எம் எஸ் பாஸ்கர் மற்றும் கீதா கைலாசம் இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பில் கலக்கியிருக்கின்றனர்… அதுபோல சரத்குமார் மற்றும் குமரவேல் இந்த தம்பதிகளும் போட்டி போட்டு நடித்துள்ளனர்..

    தொழில்நுட்ப கலைஞர்கள் …

    இயக்கம் மற்றும் நடிப்பு: இளன்

    இசை: யுவன் சங்கர் ராஜா

    படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை போட்டு படம் முழுவதும் இசை ராஜாக்கள் நடத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா..

    காதல் சோகம் நட்பு குடும்பம் பாசம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மெட்டு போட்டு படம் திரையை இசையில் ஆக்கிரமித்து இருக்கிறார் யுவன்..

    பியார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ ஆகிய படங்​களை இயக்​கியவர் இளன்.. இந்த முறை இவரே ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படம் மூலம் நாயக​னாக அறி​முக​மாகிறார்..

    பெரும்பாலும் காதல் படங்கள் என்றாலே காதலை சொல்லி படத்தின் கிளைமாக்ஸில் திருமணத்துடன் முடிப்பார்கள்… ஆனால் இந்த படம் கிட்டத்தட்ட பெண் தேடும் படலம் காதல் என திருமணத்தில் ஆரம்பிக்கிறது.. அதன் பிறகும் நடக்கும் சுவாரசியங்கள் தான் படத்தின் திரைக்கதை..

    திருமணம் செய்து கொள்ளும் ஜோடி.. பின்னர் புகுந்து வீட்டுக்கு செல்லும் பெண் என வழக்கமான திரைக்கதையாக இல்லாமல் மாமியார் வீட்டுக்கு செல்லும் மருமகனை பற்றிய கதை தான் இது..

    ஒருவேளை இனி வரும் காலங்களில் இது போன்ற திருமண பந்தங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதை ஒரு ஆணின் பார்வையில் இருந்து சொல்லியிருக்கிறார் இயக்குனரும் நாயகனுமான இளன்..

    அவரே இயக்குனர் அவரே நாயகன் என்பதால் அந்த கேரக்டரை முழுவதுமாக உள்வாங்கி கேரக்டருக்கு உடல் மொழியில் உயிர் கொடுத்திருக்கிறார் இளன்..

  • ஒன் மேன் – விமர்சனம்..

    ஒன் மேன் – விமர்சனம்..

     நான்கு நண்பர்கள் & கார் டிரைவர் என திரை பயணம் தொடங்குகிறது..

    கதை…

    மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லை.. இப்படியான சூழ்நிலையில் ஒரு அரியவகை கண்டுபிடிப்பு மூலம் உலகில் எந்த உயிரினமும் இல்லாத சூழ்நிலையில் நான்கு நண்பர்கள் உலகையே ஆள நினைக்கிறார்கள்.. அவர்களின் ஆசை நிறைவேறியதா.? அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் இதுவரை சொல்லப்படாத சுவாரஸ்யமான திரைக்கதை..

    நடிகர் &:தொழில்நுட்ப கலைஞர்

    உலக சினிமாவில் இதுவரை எவரும் செய்யாத இந்த புதுமையான முயற்சிக்காகவே சங்ககிரி ராஜகுமாரை வெகுவாக பாராட்டலாம்..

    சிறிய கூட்டம் ஒன்று காண்பிக்கப் பட்டாலும் அதிலும் அனைத்து முகங்களும் அனைத்து கேரக்டர்களையும் இவரே செய்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது..

    சினிமா துறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சங்கங்களை ஒரே ஆளாக கையாண்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம்..

    நடிப்பு ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு காஸ்டியூம் கலை நடனம் சண்டை இப்படியாக பல்வேறு துறைகளையும் சங்ககிரி ராஜ்குமார் என்ற ஒரு நபரே செய்திருப்பது எல்லையில்லா முயற்சி..

    தமிழகத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.. அங்கும் ஒருவரே பணியாற்றி இருப்பது அவரின் சரித்திர சாதனையை சொல்லும்.. படத்தில் காட்டப்படும் மேக்கிங் வீடியோவை நிச்சயம் தவற விடாதீர்கள்.. அதுதான் அவரின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை..

  • மகுடம் விமர்சனம்.. இயக்குனர் விஷாலுக்கு இந்த படம் மகுடம் சூட்டுமா.?

    மகுடம் விமர்சனம்.. இயக்குனர் விஷாலுக்கு இந்த படம் மகுடம் சூட்டுமா.?

    ரன்னிங் டைம் – 185 28 3h 5m  •UA16+

    கதை…

    விஷால் துஷாரா விஜயன் இருவரும் கணவன் மனைவி.. இவர்களுக்கு அஸ்வின் மாயா என்ற இரண்டு குழந்தைகள்.. இவர் ஒரு மெடிக்கல் ரெப்.. துஷாராவின் அப்பா தம்பி ராமையா விடம் தனக்கு கார் இருப்பதாக சொல்லி காதலி துஷாராவை  திருமணம் செய்கிறார் விஷால்..

    ஒரு கட்டத்தில் காரை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் விஷால்.. இவரது சம்பளத்திற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் லோன் கிடைக்காத காரணத்தினால் செகண்ட் ஹேண்ட் காரை ஒன்றை வாங்குகிறார்.

    எனவே மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் பயணம் செய்கிறார்.. விஷால் அந்த காரை வாங்கியது அறியாத வில்லன் கும்பல் அந்தக் காரில் பயணிப்பவர்களை கொல்ல திட்டமிடுகிறது..

    அதன்படி துஷாராவையும் மகளையும் கொன்று விடுகின்றனர்.. யாரோ ஒருவர் நினைத்து இவர்களை கொல்ல என்ன காரணம்.? விஷாலுக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு..? என்பதெல்லாம் மீதி திரைக்கதை..

    நடிகர்கள்…

    விஷால் – லிங்கா & கிருபாகரன்
    அஞ்சலி
    துஷாரா விஜயன்
    ஜான் விஜய்
    வி. ஜெயப்பிரகாஷ்
    வம்சி கிருஷ்ணா
    அஜய்
    அபு சலீம்

    மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் விஷால்.. இடைவேளை முன்பு வரை அப்பாவி விஷால் இடைவேளைக்குப் பிறகு அதிரடி விஷால்.. தந்தை மகன் என இரண்டு கெட்டப்பிலும் ஜொலிக்கிறார்.. ஆனால் மகனை விட தந்தை கெட்டப் சூப்பர் இளமையும் கூடுதல்..

    துஷாராவிடம் ரொமான்ஸ் காதல்.. அஞ்சலி இடம் வயலன்ஸ் காதல் என விஷால் விளையாடி இருக்கிறார்..

    அஞ்சலி துஷாரா என இரண்டு நாயகிகள்.. துஷாராவுக்கு அமைதியான வேடம்.. அஞ்சலிக்கு அட்டகாசமான வேடம்..

    தம்பி ராமையா ஓவர் ஆக்ட்டிங்.. எப்பதான் நிறுத்த போறீங்க.. ஜெயப்பிரகாஷ் விஷாலுக்கு உதவும் கேரக்டரில் உறுதுணை.. நெகட்டிவ் கேரக்டர் இல்லாமல் பாசிட்டிவ் கேரக்டரில் ஜான்விஜய்..

    விஷால் நண்பராக வரும் அர்ஜய்க்கு இன்னும் கூடுதல் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்..

    தொழில்நுட்ப குழு…

    ஸ்டோரி : ரவி அரசு
    டைரக்டர் விஷால்
    மியூசிக் : G.V பிரகாஷ்
    Art Director : G. Durairaj
    Dialogues: Pon Parthiban , Vishal , Anadh Kumaresan (Tamil) & Rajesh A Moorthy ( Telugu)
    Lyrics: Ekadesi, Vivek, Uma devi, Karunakaran, V7H
    Action Director: Dhilip Subbarayan
    Pro: Riaz k Ahmed – Paras Riyaz (Tamil)

    ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அதிரடி.. பின்னணி இசை தெறி லெவல்.. இளையராஜாவின் முத்துமணி மாலை பாடலை அதிரடியாக ரீமிக்ஸ் செய்திருக்கிறார்..

    ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் வேற லெவல் ரகம்.

    விஷால் படம் என்றால் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. அனல் பறக்க பறக்கத் திகட்ட திகட்ட  சண்டைக் காட்சிகளை கொடுத்திருக்கிறார்..

    ஈட்டி மற்றும் ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இந்த படத்திற்கு கதை எழுதி இருக்கிறார்.. அவர்தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி சிறிது காலம் படப்பிடிப்பை நடத்தினார்.. அவர் எடுத்த காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது..

    ஆனால் இடைவேளைக்குப் பிறகு விஷால் இயக்கிய காட்சிகள் ஓவர் ஆக்சன் ரகம்..  முக்கியமாக படத்தை மூன்று மணி நேரம் இழுத்து படத்தை பார்க்கும் நம்மை சோர்வாக்கி விட்டார்..

    இது சூப்பர் குட் பிலிம்ஸ்  தயாரித்த 99 ஆவது படம்.. அவர்கள் தயாரிப்பில் இப்படி ஒரு படமா என்ற கேள்வி வருகிறது..

  • லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த DC – விமர்சனம்…

    லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த DC – விமர்சனம்…

    கதை

    ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகன் படிப்புக்காக தங்கள் நிலத்தை விற்று ₹7 லட்சம் சேர்த்து வருகின்றனர்.. அப்போது இவர்களை பார்த்து உதவிக்காக அழைக்கும் ஒரு போலீஸ்காரர் இவர்களிடம் இருக்கும் ₹ 7 லட்சத்தை அறிந்து கொள்கிறார்.. இதனை அடுத்து அந்த தந்தையை கொன்று பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார் ..

    இதனால் அந்த குடும்பம் நீதி கேட்டு அலைகின்றனர்.. ஆனால் காவலர்களே துரோகம் செய்துவிட்டதால் வேறு வழி இன்றி ரவுடி கும்பல் லோகேஷ் குழுவை அணுகுகின்றனர்..

    அதன் பிறகு என்ன நடந்தது.? லோகேஷ் அவர்களுக்கு எப்படி உதவினார் காவலர்களை எதிர்த்து எப்படி போராடினார் என்பதெல்லாம் கதை..

    நடிகர்கள்…

    • லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ்
    • வாமிகா கபி – சந்திரா
    • சஞ்சனா ஏ.கே. – பார்வதி
    • கஸ்தூரி ராஜா – மோட்டார் மணி
    • தலைவாசல் விஜய் – அரசு
    • கிரிஷ் தயால் – போஜ்ராஜ்
    • அவினாஷ் ரகுதேவன் – கிட்டி
    • ஜவஹர் சக்தி – கருப்பன்
    • ஷரத் ரவி – சுன்னிலால்
    • பிரணவ் தியோஃபைன் – செபாஸ்டியன்
    • ஏ. ராஜரிஷி – சிங்காரம்
    • பாலாஜி தேவிபிரசாத் – அஷ்ரப்
    • அட்டுல் – ராஜரிஷி
    • மனோஜ் சஷி – மனோஜ்
    • கலையரசன் ஆர். – ராஜா மாணிக்கம்
    • ஃபிராங்க்ளின் ஜேக்கப் – ஃபிராங்கி
    • திலீபன் கே. – திலீப்
    • கர்ணா ராஜா – டிஜிபி

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.. கார்த்தி விஜய் கமல் ரஜினி என சூப்பர் ஹீரோக்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.. ஆக்சன் அவதாரம் என்றும் கூட சொல்லலாம்..

    கலைந்த சுருட்டை தலை முடி அழுக்கான உடை என எந்த பில்டப்பும் இல்லாமல் எதார்த்தமான ஒரு ரவுடியாகவே பிரதிபலிக்கிறார்.. தேவதாஸ் கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.. அதுபோல நாயகியாக வரும் வாமிகா கபி அவரும் கேரக்டருக்கு செம ஸ்கோர் செய்து இருக்கிறார்… நிறைய அழகி கொஞ்ச ஆக்சன் என இரண்டிலும் அதிரடி காட்டியிருக்கிறார்..

    கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கொள்ளை கொள்கிறார் சஞ்சனா.. உறவுகள் தொடர்கதை பாடலை பாடி ஈர்த்திருக்கிறார்..

    லோகேஷன் தந்தையாக கஸ்தூரிராஜா.. மோட்டார் மணி கேரக்டரில் ஒரு சாதாரண மெக்கானிக் போலவே காணப்படுகிறார்..

    லோகேஷன் நண்பர்களாக வரும் கிட்டி செபாஸ்டின் கருப்பு உள்ளிட்ட அனைவரும் சிறப்பு.. காவல் அதிகாரிகள் அனைவருமே நடிப்பில் கம்பீரம்..

    சரத் ரவி கேரக்டர் சீரியஸ் படத்திற்கு கொஞ்சம் காமெடி செய்து சுன்னிலால் கேரக்டருக்கு (சூடு) ஏத்தி இருக்கிறார்..

    தொழில்நுட்பக் குழு …

    • இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
    • தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
    • இசை: அனிருத்
    • ஒளிப்பதிவு: முகேஷ் ஜி
    • படத்தொகுப்பு: ஜி. கே. பிரசன்னா
    • சண்டைப் பயிற்சி: பி.சி. ஸ்டண்ட்ஸ்
    • ஆடை வடிவமைப்பு: அருண் மாதேஸ்வரன்
    • ஆடை அலங்காரம்: பெருமாள் செல்வம்
    • மக்கள் தொடர்பு (PRO): ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

    முகேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா எடிட்டிங் செய்து இருக்கிறார்.. படத்தை இரண்டு மணி நேரம் 23 நிமிடங்களில் முடித்து இருக்கிறார்கள்.. எனவே படத்தைப் பார்க்கும்போது எந்தவிதமான அயற்ச்சியும் ஏற்படவில்லை..

    முகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல் என்பதை விட ரத்தம். முழுக்க முழுக்க சிவப்பு மையம்..

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் வன்முறை போதை அதிகம் காணப்படும்.. இப்போது அவரே ஹீரோவாகி விட்டதால் அதற்கும் பஞ்சமில்லை.. படம் முழுக்க துப்பாக்கி குண்டு சத்தம்.. நாட்டு வெடிகுண்டு ஏகப்பட்ட துப்பாக்கிகள் என ரத்த களறி மையம் தான்.. லோகேஷ் வைத்து ரத்த வெறியாட்டம் ஆடி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்..

    சாணிகாயிதம் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன்.. இதில் லோகேஷிற்கு ஆக்சன் அவதாரம் கொடுத்திருக்கிறார்.. ஆக்சன் படத்திற்கு ரொமான்ஸ் கொஞ்சம் போதும் என இரண்டு ஹீரோயின்களை வைத்து கொஞ்சம் மட்டுமே ரொமான்ஸ் கூட்டி இருக்கிறார்..

    அருண் மாதேஸ்வரன் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அனிருத் இல்லாமல் இருந்தால் சரி வருமா? அனிருத் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. ஏகப்பட்ட பாடல்களை கதையின் ஓட்டத்துடன் இணைத்து இருக்கிறார்..

    பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.. ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ப அதிரடி இசையில் மிரட்டி இருக்கிறார் அனிருத்..