திரை விமர்சனம்

எங்கள் தங்கம் – விமர்சனம்

கதை…

தெலுங்கில் உருவான ’மா இன்டி பங்காரம்’… இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்..

நந்தினி என்பவர் இயக்க சமந்தா தயாரித்துள்ளார்..

ஒரு அனாதை ஆசிரமத்தில் தன் தோழியுடன் வளர்ந்த சமந்தா வளர்ந்து பெரியவர் ஆன பிறகு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.. ஒரு கட்டத்தில் கணவரின் தங்கை திருமணத்திற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார். (சமந்தா கேரக்டர் பெயர் ஸ்வர்ணா.)

அப்போது வில்லன் குல்சன் கும்பல் ஒன்று சமந்தாவை தேடி நீ ஜான்சி தானே என்று கேட்டு அவரைக் கொல்ல திட்டமிடுகின்றனர்.. தான் ஜான்சியா சொர்ணா என்பது ஒரு பக்கம் இருக்க தன் கணவருக்கும் குடும்பத்திற்கு இது தெரியக்கூடாது என்பதற்காக சமந்தா போராடுகிறார்..

அப்படி என்றால் இவர் நிஜத்தில் யார்.? இவர் ஜான்சி என்றால் ஸ்வர்ணா என்ற பெயரில் கணவர் குடும்பத்தில் வர பின்னணி என்ன.? வில்லனுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்பதெல்லாம் கதை..

நடிகர்கள்…

இதுவரை சாந்தமான நாயகி ஆக சமந்தாவை பார்த்து இருக்கிறோம். இதில் அதிரடி ஆக்ஷனில் பட்டையை கிளப்பி தான் அதிரடி ராணி என நிரூபித்துள்ளார் சமந்தா.. இடைவேளை வரை சாந்தம் சமாதானம் இடைவேளைக்குப் பிறகு முழுக்க ஆக்சன் என பட்டையை கிளப்பி இருக்கிறார்..

மாமியாருக்கு கட்டுப்பட்ட மருமகளாக.. பின்னர் மாமியார் குடும்பத்தை காப்பாற்றும் மகாராணியாக அவதரித்துள்ளார்.. சபாஷ் சமந்தா..

வில்லனாக குல்ஷன் தேவய்யா என்பவர் நடித்திருக்கிறார்.. இவர் செம ஸ்மார்ட்டாக காணப்படுகிறார்.. வில்லத்தனத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. ஒருவேளை நாயகிக்கு வலு இருக்க வேண்டும் என்பதற்காக அடக்கி வாசிக்க வைத்து விட்டார்களோ..??

சமந்தாவின் கணவராக திகந்த் மஞ்சாலே, மாமியாராக கெளதமி, மாமனராக ஆனந்த்.. இவர்கள் மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள்..

பாட்டியாக ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக மன்ஜூஷா, கொழுந்தனாக சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்தவர் என அனைவரும் அந்த குடும்ப கேரக்டர்களாகவே ஜொலிக்கின்றனர்..

தொழில்நுட்பக் குழு..

சந்தோஷ் நாராயண இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசையும் அதற்கான ஒளிப்பதிவும் சிறப்பு..

பாடல்கள் தமிழில் பெரிதாக கை கொடுக்கவில்லை ஆனால் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்திருக்கலாம்..

நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.. ஒரு பெண்ணை ஒரு பெண்ணை புரிந்து கொண்டு அவருக்கு ஏற்ப காட்சிகள் அமைத்து இருப்பது தெரிகிறது.. ஒரு பெண்ணுக்கு தன் குடும்பத்தை காப்பாற்றுவதும் அந்த குடும்பத்திற்காக கட்டுப்பட்டு நடப்பது தான் அவரின் சிறந்த கடமை என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்..

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல.. சாந்தமான மருமகள் மிரண்டால் என்ன ஆகும் என்பதை காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு எங்கள் தங்கத்தை சிறப்பாக கொடுத்துள்ளனர் சமந்தா மற்றும் நந்தினி..