திரை விமர்சனம்

மக்கள் தலைவா விமர்சனம்.. அரசியல் நையாண்டி கலாட்டா

கதை…

ரவி மரியா… ஊரைக் காக்க உருவான சங்கம் அது நாங்க இல்ல என்பது போல… ஊர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ரவி மரியா அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த பிரச்சினையை பற்றி பேச மாட்டார்.. இப்படியாக பணம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்..

ஒரு கட்டத்தில் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கியதால் ஒரு ஆட்டோக்காரர் பிரச்சினை செய்கிறார்.. இந்தப் தொடர்பான வீடியோ ரவிக்கு கிடைக்க அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைகிறார்..

இவரின் சாமர்த்தியத்தை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி நீ அரசியலுக்கு வா உனக்கு பின்புலமாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லி பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கிறார்..

அரசியல் ஆசை கண்ட ரவி மரியா உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதன் பிறகு நடந்தது என்ன.? தேர்தலில் வெற்றி பெற்றாரா..? முதலமைச்சராக ராதாரவி இவரை வைத்து அரசியல் ஆடும் ஆட்டம் என்ன என்பதெல்லாம் அரசியல் நையாண்டி திரைக்கதை..

நடிகர்கள்…

இயக்குனர் காமெடியன் வில்லன் குணச்சித்திர கேரக்டர் என்று அறியப்பட்ட ரவி மரியா இந்த படத்தின் மூலம் மக்கள் தலைவனாகிறார்.. சாரி சாரி கதாநாயகன் ஆகிறார்.. இவரை கொஞ்சம் காமெடி செய்ய விட்டிருக்கலாம்… மனிதர் பின்னி எடுத்து இருப்பார்.. ஆனால் படம் முழுக்க சீரியஸ் ரோலில் காணப்படுகிறார்..

அரசியல்வாதிகளைப் போல பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கைதட்டலை அள்ளுகிறார்.. நாயகி இருந்தாலும் லவ் காட்சிகள் இல்லை..

ரவி மரியாவுடன் வருண். தன் பங்குக்கு l அரசியல் செய்திருக்கிறார்..

பெருந்தலைவர் காமராஜரை பார்த்து அரசியல் கற்றுக் கொண்டு அவரின் வழியில் நடக்கும் ராதாரவியின் சதுரங்க வேட்டைதமிழ் சினிமாவுக்கு புதுசு. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி அரசியல் ஆட்டம் மக்களுக்கான சாட்டையடி..

பழ கருப்பையா நிஜ அரசியல்வாதி என்பதால் அந்த கேரக்டருக்கு பொருந்தி இருக்கிறார்..

நாஞ்சில் சம்பத் வழக்கம் போல பேசியே கவர்கிறார்.. பெட்டி பெட்டியாக பணம் வாங்கி பர்மா பஜாரில் சூட்கேஸ் கடை வைத்திருக்கிறேன் என்று நக்கலும் அடிக்கிறார்..

பேரரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர் ..

தொழில்நுட்பக் குழு..

ஒளிப்பதிவும் இசையும் ஓகே ரகம்… இது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சென்சார் செய்யப்பட்ட படமாக இருந்தாலும் இன்றைய விஜய்யின் தவெக கட்சியின் அரசியல் நிகழ்வை நினைவுபடுத்துகிறது..

கடந்த 50 ஆண்டுகளில் நாம் பார்த்த அதிமுக திமுக அரசியல் கட்சித் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.. எல்லாரையும் கிண்டல் அடித்திருக்கிறார்.. முக்கியமாக கதை வசனம் எழுதி சம்பாதித்து அரசியலில் கறை கண்ட கருணாநிதியை பலமாக கிண்டலடித்துள்ளார் இயக்குனர் ராம்தேவ்..

இது போன்ற அரசியல் படம் என்றால் ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்ச 100 துணை நடிகர்கள் இருக்க வேண்டும். ஆனால் பட்ஜெட் குறைவு காரணமாக ஒரு 20 ஆட்களை மட்டுமே காட்டி இது லோ பட்ஜெட் படம் தான் என்கின்றனர்.

அரசியலுக்கான படம் என்றால் அதற்கான ஆட்களை திரட்டி காட்சியை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டாமா

கரூர் சம்பவத்தில் 40 பேரை பலி வாங்கிய விஜய்யும் விட்டு வைக்கவில்லை..

நீ தனியா திருடுனா திருடன்… கூட்டமா சேர்ந்து திருடனா நீ தலைவன்… என்ற நையாண்டி வசனங்களும் உண்டு..

ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்கு பணம் வாங்கி இன்று அரசியல் இப்படி ஆகிவிட்டது என்ன ஜனநாயகத்தை பணநாயகமாக கிண்டல் அடித்திருக்கிறார்..

பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்த மக்களுக்கு பாடம் புகட்ட இயக்குனர் ராம் தேவி எடுத்த அரசியல் களம் தான் இந்த மக்கள் தலைவா..

Makkal Thalaiva movie review