29 – திரைப்பட விமர்சனம்
கதை…
சென்னைக்கு வேலை தேடி வருகிறார் நாயகன் விது.. வந்த இடத்தில் நாயகி ப்ரீத்தியை சந்தித்த பின் காதல் கொள்கிறார்.. இருவரும் நெருக்கமாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை உணர்ச்சி பூர்வமாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்..
நடிகர்கள்…
விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
வாழ்க்கையில் எந்த ஒரு கனவும் இல்லாமல் வாழும் நாயகன்.. ஆனால் லட்சியத்தோடு வாழும் நாயகி இவர்களுக்குள் ஏற்படும் காதலை மிகவும் எளிமையாக ஒவ்வொருவரும் ரசிக்கும்படி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர் விது மற்றும் பிரீத்திஅஸ்ராணி..
அயோத்தி படத்தில் கலக்கியதை விட இந்த படத்தில் அதிகப்படியாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார் பிரீத்தி..
கல்லூரி வில்லனாக வருகிறார் மாஸ்டர் மகேந்திரன் கொஞ்சம் காட்சி தான் என்றாலும் மன நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகனின் ரூம் மெட்டாக நடித்தவர்.. நாயகனின் அம்மாவாக ஆதிரா பாண்டியலட்சுமி, நாயகியின் அம்மாவாக சிந்து ஷியாம் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் சிறப்பு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்..
பெரும்பாலும் காட்சிகளில் கவிதை மழை பாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. பூ மழை ரோஜாக்கள் பேருந்து குடை என ரசிக்க வைக்கிறார்..
‘பொல்லாத ஆசைகள்…’ பாடல் காட்சியும் வரிகளும் இசையும் மனதை விட்டு நீங்காதவை..
இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்..
தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் மே 8ம் தேதி வெளியிடுகிறது..
மேயாதமான், ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்..
இந்தப் படத்தை வழக்கமான காதல் கதை தானே என்று சொல்லிவிட முடியாது.. படம் முழுக்க காதல் மழை இருந்தாலும் உணர்ச்சிகளின் தொகுப்பை கவிதை சாரலாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
பல காட்சிகளில் வசனங்கள் மூலம் நம்மை படத்துடன் ஈர்த்துவிடுகிறார் வசனகர்த்தா..
பார்த்தவுடன் காதல்.. பிடிக்கவில்லை என்றவுடன் பிரேக் அப் என மாறிவிட்ட இந்த காலத்தில் இன்னும் காதல் வாழ்வது எதார்த்தம் என்பதை அழகாக உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குனர் ரத்தினகுமார்..

