ஜாஸ்பர் திரை விமர்சனம்

வங்கி மேலாளராக இருக்கும் விவேக் ராஜகோபால் குடும்பத்தோடு வாடகை வீட்டுக்கு குடி வருகிறார். அந்த வீட்டின் முதலாளியான ஜாஸ்பர், எப்போதும் மதுவில் மூழ்கிக் கிடக்கிறார்.
வங்கி மேலாளரான விவேக்கிடம் ஒரு கும்பல் 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மாற்றி கொடுக்குமாறு கேட்கிறது. அதற்கு சம்மதிக்காத அவரை அந்த கும்பல் கடத்தி செல்வதோடு, அவருடைய விரல்களை ஒவ்வொன்றாக வெட்டி அனுப்புகிறது.
தனது கணவரை காப்பாற்றும்படி ஜாஸ்பரிடம் லாவண்யா கேட்க, அவருக்கு உதவி செய்ய களத்தில் இறங்கும் ஜாஸ்பர், விவேக்கை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது திகுதிகு திரைக்களம்
இளம் வயது ஜாஸ்பராகவும், அவரது மகனாகவும் விவேக் ராஜகோபால் நடிப்பில் நிறையவே வித்தியாசம் காட்டுகிறார்.,
வயதான ஜாஸ்பர் வேடத்தில் நடித்திருக்கும் சி.எம்.பாலாவுக்கு அந்த ஆறடி அதிரடி தோற்றமே கம்பீரம் சேர்த்து விடுகிறது.
லாவண்யா, ஐஸ்வர்யா தத்தா அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்கள்.
பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ்.டி, ஆக்–ஷன் கதையை புதிய கோணத்தில் அணுகிய விதத்தில் முத்திரை பதிக்கிறார்.
நாயகன் விவேக்கை கடத்திய வில்லனுக்கும் ஜாஸ்பருக்கும் இடையே இருக்கும் பகைக்கான காரணம் அழுத்தமாக சொல்லப்படாதது சிறு குறை.
ஜாகுவார் வேகம் இந்த ஜாஸ்பரிடம்.
