செய்திகள்

காளிதாஸ் 2 – விமர்சனம்…

கதை…

ஒரு அப்பார்ட்மெண்டில் புத்தாண்டு அன்று ஒரு சிறுமி காணாமல் போகிறாள்.. சில மணி நேரங்களில் அவள் கொல்லப்படுகிறாள்..

இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி கொண்டு காவல்துறை விசாரிக்கிறது.. போலீஸ் பரத் மற்றும் பவானி ஸ்ரீ இருவரும் விசாரணையில் இறங்குகின்றனர்..

அவர்கள் விசாரிக்க விசாரிக்க எதிர்ப்பாராத திருப்பங்கள்.. இறுதியில் என்ன ஆனது.?

நடிகர்கள்…

பரத் – காளிதாஸ்
சங்கீதா – ரூபா சுந்தரி
பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி

சினிமா போலீஸ் போல அல்லாமல் எதார்த்த போலீசாக தன்னுடைய பொறுப்பு உணர்ந்து பரத் பட்டைய கிளப்பியிருக்கிறார்.. அவருக்கு பக்கபலமாக ஏசி வேடத்தில் பவானி ஸ்ரீ வெளுத்துக்கட்டி இருக்கிறார்..

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கிறார் பூவே உனக்காக சங்கீதா.. சொல்லாமலே என்ற பாடலுடன் அவருக்கு அறிமுகமும்.. இடைவேளை வரை இவரது கேரக்டர் வெறுமனே சென்றாலும் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பத்தை இவரது கேரக்டர் கொடுத்து சபாஷ் பெறுகிறார் சங்கீதா..

அஜய் கார்த்தி – ஸ்டீபன்
அபர்ணதி – சஞ்சு
அனந்த் நாக் – கோகுல்
பிரகாஷ் ராஜ் – வழக்கறிஞர் நட்ராஜ்
கிஷோர் – பாண்டியா.. உள்ளிட்ட கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளது.. அஜய் கார்த்தி அவர் நதி கிஷோர் பாத்திரங்கள் கவனம் பெறுகின்றன..


தொழில்நுட்ப குழு…

எழுத்து & இயக்கம் – ஸ்ரீ செந்தில்
திரைக்கதை – அரவிந்தன் ஆனந்த்
தயாரிப்பு – ஸ்கை பிக்சர்ஸ் (“ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன்)
இசை – சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஜி.துரைராஜ்
ஒலி வடிவமைப்பாளர் – தபஸ் நாயக்
கலை இயக்குனர் – கலியுக ஏ.ராஜா
சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர் – டோரதி ஜெய் (டிஜே)
பாடல் வரிகள் – மோகன்ராஜ்
நடனம் – பாபி
விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்
பேனர் – ஸ்கை பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பெரும்பாலும் அப்பார்ட்மெண்டில் நடக்கும் விஷயங்களை அழகாக படம் பிடித்திருக்கிறார்.. சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.. படத்தின் திரில்லருக்கு இசையின் வேகம் பெரிய பலம்.. ஒரு பதபதப்பை இசையில் கொடுத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைத்திருக்கிறார்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பரபரப்பான திரில்லர் பார்த்த அனுபவத்தை இந்த படம் கொடுக்கிறது.

காவல்துறை அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி இன்வெஸ்டிகேஷன் செய்யும் பரத் மற்றும் பவானியின் விறுவிறுப்பு படத்திற்கு கூடுதல் பிளஸ்…

ஸ்ரீ செந்தில் இயக்கியிருக்கிறார்.. படம் தொடங்கிய பத்து நிமிடத்தில் தொடங்கி படம் முழுவதும் விறுவிறுப்பு ஏற்றிருக்கிறார்.. கதையை எந்த விதத்திலும் வேறு திசையில் கொண்டு செல்லாமல் திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு முழுமையான த்ரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்..