நதி பட விமர்சனம்

சாம் ஜோன்ஸும், ஆனந்தியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நட்பாக பழகுகிறார்கள். ஆனந்தியின் குடும்பத்தின் மீது இருக்கும் பகையால், அவர் சாம் ஜோன்ஸை காதலிப்பதாக ஆனந்தியின் தாய் மாமன் கரு.பழனியப்பன் வதந்தி கிளப்ப… அந்த வதந்தியால் சாம் ஜோன்ஸ் மற்றும் ஆனந்தி வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது? என்பது மீதிக்கதை.
கல்லூரி மாணவராக வரும் சாம் ஜோன்ஸ், ஆனந்தியின் காதலை மறுக்கும் இடத்தில் தேர்ந்த நடிப்பில் பிரகாசிக்கிறார்.
வழக்கமான தனது குழந்தைத்தன நடிப்பு மூலம் கவனம் பெறும் ஆனந்தி, கிளைமாக்சில் கலங்கவும் வைக்கிறார்.
ஆனந்தியின் பெரியப்பாவாக வேல.ராமமூர்த்தி, அப்பாவாக ஏ.வெங்கடேஷ், தாய் மாமனாக கரு.பழனியப்பன் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பிரகாசிக்கிறார்கள். நாயகனின் தந்தையாக வரும் முனீஷ்காந்த் குணசித்ர கேரக்டரில் பளிச்.
திபு நினன் தாமஸ் பின்னணி இசையில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறார்.
எம்.எஸ்.பிரபுவின் கேமராவில் மதுரை வீதிகள் இன்னும் அழகு.
வழக்கமான காதல் கதைக்குள் சாதிய வன்முறையையும் அரசியலையும் காட்சிப்படுத்தி காட்சிகளை பரபரப்பாக கொண்டு போகிறார், இயக்குனர் தாமரைச்செல்வன். எதிர்பாராத இடைவேளை ட்விஸ்ட்டிலும் முத்திரை இயக்கம்.
ஓடும் நதி.
