25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் ‘மாயோன்’

புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான ‘மாயோன்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ளது.
ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக 25-ம் நாளை கடந்துள்ளது.
அருமையான திரைக்கதை. அட்டகாசமான உருவாக்கம். நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணைக் கவரும் பிரமாண்ட காட்சிகள் என மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துள்ளது.
மாமனிதன், வேழம் படங்களுடன் மாயோன் திரைப்படம் வெளியானது. மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் கூட்டத்தால் இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து வருகிறது.
மாயோன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்செலவில், நமது பாரம்பரிய பெருமைகளை பறை சாற்றும் விதமாக பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தொழில் நுட்ப கலைஞர்களுடன் ஒரு அதிரடி திரில்லராக மாயோன் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
