ஹாலிவுட் தரத்தில் உருவானஅரவிந்த்சாமியின் ‘கள்ளபார்ட்’திரைப்படம் மே மாதம் வெளியாகிறது.

விக்ரம்-தமன்னா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது அரவிந்த்சாமி-ரெஜினா நடித்துள்ள ‘கள்ளபார்ட்’ படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.
‘என்னமோ நடக்குது, அச்சமின்றி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்க, கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெராடி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் P.ராஜபாண்டி கூறுகையில், ‘‘படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை இதில் பார்க்கலாம். படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மே மாதம் படம் வெளியாக உள்ளது’’ என்கிறார்.
படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வருமாறு.
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
இசை – நிவாஸ் K பிரசன்னா
பாடல்கள் – கங்கை அமரன், சரஸ்வதி மேனன்.
எடிட்டிங் – S. இளையராஜா
கலை – மாயா பாண்டி
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
தயாரிப்பு – S.பார்த்தி, S.சீனா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – P.ராஜபாண்டி. DF.Tech
