சினி நிகழ்வுகள்

‘ஓ சொல்றியா மாமா..’ பாடலை அடுத்து ஆண்ட்ரியா பாடிய பாடல்…

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல் ரசிகர்களின் கொண்டாட்டப் பாடலாக இருக்கும் என்று அடித்து சொல்கிறார்கள், படக்குழுவினர்.

ஏற்கனவே ‘புஷ்பா’ படத்தில் ‘ஒ சொல்றியா மாமா’ பாடலை பாடி ரசிகர்களுக்கு ‘கிக்’ எற்றிய பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா., இப்போது ‘வெப்’ படத்துக்காக-

“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டை..
வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..
இரவு முடியும் வரை… நீ ஆடு.. ”

-என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலை மிர்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிப்பில் ஆக்–ஷன் திரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு
கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் படத்தின் பாடலை வெளியிடவும் அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.