திரை விமர்சனம்

லவ் ஓ லவ்  – விமர்சனம் [3.75/5…]

கதை…

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் பவிஷ் 40,000 சம்பளம் வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இவரது காதலி நாகதுர்கா ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.. இவர்கள் காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக போலீஸ் செல்வராகவனிடம் பிரச்சனை செல்கிறது.. நாயகிக்கு ஆதரவாக மாதர் சங்கத் தலைவி வனிதாவும் வருகிறார்..

என்னால் அவளை இனியும் காதலிக்க முடியாது.. என்கிறார்.. ஆனால் காதலியோ பவிஷ் வேண்டும் என்கிறார்.. இந்த சூழ்நிலையில் பவிஷ் ஒரு கண்டிஷன் போடுகிறார்..

நான் நம்முடைய நான்கு வருட காதலில் செய்தது எல்லாம் நீ நான்கு மாதத்தில் செய்தால் உன்னை காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன்.. இல்லையென்றால் லவ் பிரேக்கப் என்கிறார்..

அதன் பிறகு நாயகி என்ன முடிவெடுத்தார்.? நாயகனுக்காக அந்த சவாலை ஏற்றுக் கொண்டாரா அல்லது இவனை விட்டு விட்டு சென்றாரா என்பதெல்லாம் திரைக்கதை..

நடிகர்கள்…

2K KID இளைஞனை அப்படியே ஜெராக்ஸ் காப்பியாக வைத்திருக்கிறார் பவிஷ்.. என்னதான் குடும்பத்தில் கஷ்டங்கள் இருந்தாலும் காதலிக்காக ஓடுவது.. எந்நேரமும் பிக்கப் செய்வது டிராப் செய்வது அவர்களுக்காக காஸ்ட்லி பொருட்களை வாங்கிக் கொடுப்பது.. அதற்காக கிரெடிட் கார்டு வாங்கி கடனில் தத்தளிப்பது என அனைத்தையும் செய்து நம்முடன் கனெக்ட் ஆகி விடுகிறார்..

டான்ஸ் பைட் ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார் பவிஷ்.. ஆனால் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பு நாகதுர்காவிடம் இல்லை.. கொஞ்சம் நடிக்க முயற்சித்து இருக்கிறார் டான்ஸ் ஓகே ஆனால் எமோஷன் காட்சிகளில் மெச்சூரிட்டி போதவில்லை..

இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டு வரும் உண்டு.. செல்வராகவன் தன் மருமகன் என்பதற்காக ஒத்துக் கொண்டாரோ.? அடாவடி பெண் என்பதால் வனிதா கேரக்டருக்கு பொருந்தி போகிறார்..

மிடில் கிளாஸ் தந்தையாக கேஸ் ரவிக்குமார் கேரக்டரில் பளிச்சிடுகிறார்..

தொழில்நுட்பக் குழு …

ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் படத்தின் அனைத்து காட்சிகளும் கலர்ஃபுல்… முக்கியமாக பாடல் காட்சிளில் தன் அதிகபட்ச உழைப்பை கொடுத்து காட்சியை இன்னும் சிறப்பாக்கி இருக்கிறார்..

கலை இயக்குனரின் பணியும் பாராட்டுக்குரியது.. முக்கியமாக வாடி பொட்ட புள்ள வெளியே என்ற ரீமிக்ஸ் பாடலும் அந்த கோர்ட் பாடலும் கலைவண்ணத்தில் ரசிக்க வைக்கிறது..

வசனங்களும் சில இடங்களில் கைத்தட்டலை பெறுகிறது.. முக்கியமாக நாகதுர்காவின் தோழி ஒரு திருநங்கை பேசும் போது… பெண்களுக்கு படிப்பு வேலை என்பதெல்லாம் நாம் கேட்டு பெற்ற உரிமை… ஆனால் ஆண்களுக்கு அது கடமை.. அவர்கள் கடமை திணிக்கப்படுகிறது.. ஆனால் பெண்கள் உரிமை அப்படி இல்லை என பேசும் போது கைத்தட்டலை கேட்க முடிகிறது..

தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பாக்ஸ்ன் என்ற பெயரில் வலம் வரும் இரு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.. ஏகப்பட்ட பாடல்கள் இருப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்..

மகேஷ் ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.. ஆண் பெண் எப்படி சந்தித்தார்கள்.. அவர்கள் எப்படி காதலர்கள் ஆனார்கள் என்பதையெல்லாம் காட்டாமல் நேரடியாக கதைக்கு வந்து அவர்கள் ஈகோ பிரச்சனையை மையப்படுத்தி நகர்த்தி இருக்கிறார்..

முக்கியமாக ஒருவரிடத்தில் ஒருவர் இருந்து பார்த்தால் மட்டுமே அவர்களின் வலி புரியும், சில பெண்கள் தங்களுடைய சுயநலத்திற்காக ஆண்களை பயன்படுத்துவதும் ஆனால் அது போன்ற ஆண்கள் கிடைப்பது அரிது என்பதையும் காட்சிப்படுத்தி ரசிகர்களின் அன்பை பெறுகிறார் மகேஷ் ராஜேந்திரன்..