நடிகர் விஜய் தந்தை வீட்டு முன்பு குவிந்த பத்திரிக்கையாளர்கள்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் தந்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார்.ஆனால், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று செய்தியாளரை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை என தெரிவித்தார். மேலும், விஜய் கூறியதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள். நான் என்ன நோக்கத்தில் கட்சியை பதிவு செய்தேன் என்பதை தனித்தனியாக என்னை பேட்டி எடுங்கள். அப்போது சொல்கிறேன். நல்லது நடக்க வேண்டும் என கருதியே கட்சியை துவங்கினேன் என அவர் கூற, யாருக்கு நல்லது? என செய்தியாளர்கள் கேட்க, இத்தனை மைக்குகள் முன்பு பேசி எனக்கு பழக்கமில்லை எனகூறி கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் எஸ்.ஏ.சி.
