ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்…
கதை…
நாயகன் – அந்தோணி… நாயகி – மதுமிதா..
ஒரு பணக்கார வீட்டு பையன் அந்தோணி.. நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் இவருக்கு எப்போதும் மதுவும் வேண்டும் மாதுவும் வேண்டும்..
தினமும் எல்லா வேளையும் குடித்துக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி பெண்களுடன் ஜாலியாக இருப்பதால் ஒரு புரோக்கர் இவருக்கு ஒரு பெண்ணை அனுப்பி வைக்கிறார்.. அவர்தான் ஹீரோயின் மதுமிதா..
மற்ற பெண்களை விட இவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதால் தினம் தினம் அவரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்யும் அளவுக்கு நெருக்கமாகின்றனர்..
ஆனால் நீ ஒரு குடிகாரன்.. உன்னுடன் வாழ முடியாது.. எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள்.. நீ குடிப்பதை நிறுத்தினால் உன்னுடன் வாழ்வேன் என்கிறார்..
நீ ஒரு விபச்சாரி.. நீ என்னை கேள்வி கேட்கிறாயா? என்று நாயகன் சொல்ல இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது..
அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான் கதை..

நடிகர்கள்….
D Anthony
Madhumita Das
Jeeva Ravi
Regin Rose
Navya Suji
நாயகன் நாயகி இவர்கள் இருவரும் தான் படத்தில் ஒட்டுமொத்தத்தை ஆக்கிரமித்து உள்ளனர். கொஞ்ச நேரம் நண்பர்கள் உறவினர்கள் என்று வந்து செல்கிறார்கள்..
பஞ்சாப் நாயகி மதுமிதா.. விபச்சாரி கேரக்டர் என்றாலும் எல்லை மீறாமல் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தனக்கும் ஒரு வாழ்க்கை உண்டு அதற்குள் இன்பம் வேண்டும் எனக்கு இவர் நினைப்பது சரியே..
அந்தோணியின் தந்தையாக ஜீவா ரவி… அந்தோணி நண்பர்கள் இருவர் இப்படியாக கதையை நகர்த்த உதவி உள்ளனர்..
ரெஜின் ரோஸ், நவ்யா இருவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
Written, Directed & Edited by: D Anthony
Producer : D Anthony
DOP : Pietro Villani
Music Composer (Songs) : Jaikar Harinath & Ashok Sridharan
Music Composer (RR) : Joey Reda
Lyricist : Karthik Netha, Tamil Mani
Singer : RK Adithya, Sanjana Kalmanje, Deepak Blue & Jaikar Harinath
ஓரிரு பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை பெரும்பாலும் ஒலிக்கவில்லை… வசனங்களும் மூலமே படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்..
எடிட்டர் தயாரிப்பாளர் இயக்குனர் கதாநாயகன் என அனைத்து பணிகளையும் சுமந்து இருக்கிறார் அந்தோணி.. அதனால் பெரும்பாலும் அதிகப்படியான குளோசப் காட்சிகள் வைத்திருக்கிறார்..
பேசுறாங்க பேசுறாங்க படம் முழுவதும் பேசுறாங்க எப்ப தான் முடிப்பீங்க என்று கேட்கும் அளவுக்கு இழுத்து கொண்டே இருக்கிறார் இயக்குனர் அந்தோணி…
தமிழ் படத்தில் அழகான தலைப்பு வைத்து பெரும்பாலும் 90 % ஆங்கில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.. நாயகன் நாயகி உரையாடல் வசனங்களை வைத்து காட்சிகளை நகர்த்தி கொஞ்ச நேரம் உணவுகளுக்கு வழி விட்டு இருக்கிறார் இயக்குனர்…
