திரை விமர்சனம்

கான் சிட்டி – விமர்சனம்…

கதை…

1990 காலகட்டங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கும் கதை இது.. மின்சார வாரியத்தில் கரண்ட் பில் வசூலிக்கும் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.. இவரின் உயர் அதிகாரிகளாக வி டிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ்.

இவருக்கு இருக்கும் ஏகப்பட்ட கடன் தொல்லை பிரச்சினையால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையை எவருக்கும் தெரியாமல் இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் விட்டு அதன் மூலம் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. மேலும் இந்தத் தொகையை வைத்து நண்பருடன் இணைந்து பிசினஸ் செய்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க… வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு டிரஸ் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அர்ஜின் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்.. அதுபோல மற்றொரு பக்கம் நாயகி அன்னா பென் அவரும் சில பிராடு வேலைகள் செய்து அதன்மூலம் வசூலாகும் தொகையை அர்ஜுன் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்..

ஒரு கட்டத்தில் அர்ஜுன் நண்பர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு இறந்து விட எல்லாரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர்.

பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதால் போலீஸ் இவர்களை கைது செய்கின்றனர்..

அதன் பிறகு நடந்தது என்ன.? இந்த நான்கு பேரின் வாழ்க்கை என்ன ஆனது.? இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

அலட்டிக் கொள்ளாமல் எதார்த்த நாயகனாக அசத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.. பிரச்சனை மேல் பிரச்சனை வந்தாலும் அதை அவர் எதிர்கொண்டு சமாளிக்கும் விதம் அதற்கு அவர் போடும் ஐடியா (நல்ல) திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.. ஆனால் அதுவும் கற்பனையை மீறிய லாஜிக் மீறல்கள் மட்டுமே..

யோகி பாபுவின் ஒன்லைன் வழக்கம்போல ரசிக்க வைக்கிறது.. இதில் ஓஹோ என்று கத்தி சத்தம் போடாமல் அடக்கி வாசித்து இருக்கிறார் யோகி பாபு.. அவருக்கு பிளாக் காமெடி கை கொடுத்திருக்கிறது..

பல படங்களில் அழுகை மூஞ்சியாக அம்மாவாக பாட்டியாக காணப்பட்ட வடிவுக்கரசி இதில் காமெடி செய்து கலக்கியிருக்கிறார்.. அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகள் ரசிக்க வைக்கிறது..

கொட்டுக்காளி படத்தில் சூரி உடன் நடித்த நாயகி அன்னா பென்.. இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.. வெள்ளந்தி முகத்தை வைத்துக்கொண்டு ஃப்ராடு வேலைகளில் வெளுத்து கட்டி இருக்கிறார்…

கல்யாணசுந்தரம் போலீஸ் கேரக்டர்.. பேராசைப்படும் போலீசாக மிரட்டி இருக்கிறார்.. அலட்சிய அரசு அதிகாரியாக வி டிவி கணேஷ்.. வருடத்தில் எல்லா நாட்களும் வேலைக்கு டிம்மிக்கி கொடுத்து வீட்டு வேலைகளை செய்யும் அரசு அதிகாரியாக கணேஷ்..

தொழில்நுட்பக் குழு…

என்ன நினைத்து காட்சிகளை எடுத்தாரோ ஒளிப்பதிவாளர்.. 90 காலகட்டங்களில் நடக்கும் கதையாக இருந்தாலும் படம் முழுவதும் மங்கலாகவே காட்சி அளிக்கிறது.. அதுவும் மின்சார வாரியத்தில் மின்சாரமே இல்லாதது போலவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது…

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார், பொய் சொல்லலாம் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்பது போல கான் சிட்டியில் ஏகப்பட்ட ஏக்கர் கணக்கில் பிராடு.. பொய் இப்படி தான் கதை நகர்கிறது…

ஹரிஷ் துரைசாமி இயக்கி இருக்கிறார்.. கரண்ட் பில் தொகையை வசூலிக்கும் ஒரு அரசு அதிகாரி.. உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் இப்படி எல்லாம் பணத்தை சுருட்ட முடியுமா என்பது முதல் கேள்வி..

மத்திய அரசுக்கு தெரியாமல் போலியான ஒரு டோல்கேட் அமைக்க முடியுமா.? அதுவும் மினிஸ்டர் மற்றும் எம்எல்ஏ இருவரும் வெறும் வீடியோ காலில் பேசிக் கொண்டால் இதெல்லாம் சாத்தியமாகுமா.?

டிவி சேனலில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் மதன்… தினசரி செய்தித்தாளில் அவர் பெயரில் செய்தியை பதிவிட முடியுமா.? அதுவும் அவரது பெயரில் வேறு ஒருவர் ஆபீசுக்குள் நுழைந்து செய்தியை பதிவிடுவது எல்லாம் நம்பும்படியான காட்சிகள் இல்லை..

நாங்க நம்புற மாதிரி படம் எடுக்க மாட்டோம்.. ஆனால் நம்பி தான் நீங்க படத்தை பார்க்க வேண்டும் என்பது போல இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் துரைசாமி..

Con City movie review