திரை விமர்சனம்

வள்ளுவன் – விமர்சனம்…

கதை…

சென்னையில் வசிக்கிறார் நாயகன் சீனு.. ஒரு நாள் நாயகி ஆஸ்னாவே சந்திக்க காதல் கொள்கிறார்.. அதன் பிறகு அவருடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்..

இந்த சூழ்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அந்த கொலை செய்யப்பட்டவர்கள் உடலில் எல்லாம் திருக்குறள் வாசகம் எழுதி வைக்கப்படுகிறது.. இதனை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பிரேம்..

திருக்குறளை எழுதி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறான் கொலையாளி.. அப்படி என்றால் அவன் கூலிக்கு வேலை செய்பவன் அல்ல.. அவன் யார் அவனின் நோக்கம் என்ன.? நாயகன் நாயகியின் பங்கு இந்த சமூகத்தில் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

சேத்தன் சீனு – ஆஸ்னா சாவேரி.. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இவர்களின் நட்பை வளர்த்து காதலர்களாக மாறியிருக்கின்றனர்.. நல்ல தோற்றம் நல்ல நடிப்பு என சேத்துன் சீனு ரசிகர்களைக் கவர்கிறார்… வழக்கமான கமர்சியல் ஹீரோ தான் என்றாலும் ஒரு சோசியல் மெசேஜ்டன் படத்தை கொடுத்திருக்கின்றனர்..

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றியிருக்கிறார் ஆஸ்னா சாவேரி.. சமூக சேவை செய்யும் இளகிய மனதுடன் இளைஞர்களை கவர்கிறார்..

(மறைந்த) மனோபாலா நடித்திருக்கிறார்.. சாய் தீனா, பிரேம்குமார், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்டோரும் உண்டு..

தொழில்நுட்ப குழு…

சமூக கருத்துடன் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார்..

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய அஸ்வத் இசையமைத்திருக்கிறார்.. இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பு..

சின்னஞ்சிறு கூட்டில் சாமியை காட்டுற… என்ற பாடல் வரிகள் கவர்கின்றன..

படத்தில் ஏதோ ஒரு காட்சியில் வரும் ஒரு சில வாக்கியங்கள் கூட நம் மனதை விட்டு நீங்காது. அந்த வகையில் ஒரு முதியோர் இல்லத்தை காட்டும் போது.. விழுதுகள் வெறுத்த வேர்கள் இல்லம்.. என்ற முதியோர் இல்லத்தை காட்டுவது சங்கர் சாரதி இயக்குனரின் சிந்தனையை காட்டுகிறது..

கடுமையான தண்டனைகள் இருந்தால் குற்றங்கள் இருக்காது.. குற்றவாளிகள் இல்லை என்றால் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் வேலை இருக்காது.. எனவே ஒரு வகையில் குற்றவாளிகளை வளர்ப்பது இவர்கள் தான்.. இவர்கள் திருந்தினாலே குற்றங்கள் குறையும்..

தங்களுடைய சுயநலத்திற்காக லாபத்திற்காக காவல்துறை & நீதித்துறையும் குற்றவாளிகளை வளர்த்து விடுகின்றனர் என்பதையும் தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சங்கர் சாரதி..

பாலியல் சீண்டல் செய்து இளம் பெண்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சில விஷமிகளை அடையாளம் காட்டியிருக்கிறார்..

இது போன்ற செய்திகள் நமக்கு ஒரு தகவல் தான்.. ஆனால் இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களை நிலை என்ன.? அவர்கள் ஆவேசம் அடைந்து சட்டத்தை கையில் எடுத்தால் என்ன ஆகும் என்பதையும் ஹீரோ சேத்தன் சீனு மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சங்கர் சாரதி..

திருவள்ளுவர் எழுதிய குறள்களை வைத்து ஒரு சமூகத்தில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்த வள்ளுவன் படத்தின் மூலம் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்.