சினி நிகழ்வுகள்

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில்,

படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,

இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன் சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.

இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ

மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி

ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை

பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.

கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,

இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.

விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும்

எழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர் எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.

இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும்

என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்

கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.

இயக்குநர் ராம் பேசியதாவது..,

நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள்

சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.

தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை

பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.

இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும்

விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.

எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம் உண்மையாக நம்புவது தான் காதல்.

இப்போது நாம் யாரையும் பற்றி

தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,

பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.

தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது. அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,

இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த படத்தின் கதையை நான் 2012,

2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011-12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.

முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான

காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.

அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள்

சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.

கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.

இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு

அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.

நடிகை கௌரி கிஷன் பேசியதாவது..,

முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு

செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.

ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று

எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த

கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.

எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.

மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.

எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த

நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.

இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக

நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.

தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.

விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.

விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர்

தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.

இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால்

நான் வராமல் இருக்க முடியாது.

விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.

இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.

சர்வதேச அளவுக்கு போவார்.

பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.

எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு

முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.

அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும்

திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

நடிகை மாளவிகா பேசியதாவது..,

என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான்

மிகவும் நன்றியுடன் இருப்பேன்

இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.

பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள்

மிகவும் பெரியவை.

இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,

நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.

இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக

கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது.
பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!

 

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,

நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.

அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.

அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம்.

இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.

அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.

ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.

முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம்

பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.

எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று.

அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம்

கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.

அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு

முக்கியமான பங்கு இருக்கிறது.
இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.

சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.

அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே

தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.

மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.

இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.

என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம்

என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.

 

நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,

பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர்

இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன்.

இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.

விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய

கற்றுக்கொண்டேன்.

எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.

விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

“தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத்

அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.

ஏப்ரல் 10 ரிலீஸ் என்று

சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க

ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.

கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.

எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று

கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,

இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த

நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.

நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று

தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல்

10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த ப