நீளிரா – விமர்சனம்
கதை…
இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களை பற்றி நிறைய திரைப்படங்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் அவையெல்லாம் ஆவண படங்களாக இருக்கும.. ஆனால் இதில் இருந்து சற்று மாறுபட்டு ராணுவத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள போராட்டத்தை வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளனர்.
முக்கியமாக ஒரு திருமண நடக்கவிருக்கும் வீட்டிற்கு இராணுவத்தினர் திடீரென நுழைந்து போராளிகளை தேடினால் அந்த குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும்.. ராணுவத்தினரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
1988 காலகட்டங்களில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சோமீதரன்..

நடிகர்கள்….
நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித்
இதில் நவீன் சந்திரா அமைதிப்படை கேப்டனாகவும், சனத் தமிழ் போராளியாகவும் நடித்திருக்கிறார்கள்..
இருவரும் அந்தந்த கேரக்டர்களுக்கு அப்படி ஒரு பொருத்தம்.. நடிப்பில் சிறப்பு.. ஒருவர் ராணுவ வீரனாக ஒருவர் களப்போராளியாக இருவரும் அந்த பாத்திரத்தில் ஜொலிக்கின்றனர்..
திருமண குடும்பத்தினராக வேணு, ரூபா கொடுவாயூர், சுவாதி கிருஷ்ணன், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் ஆகியோர் நடித்துள்ளனர்.. ஒரு திருமண வீட்டுக்குள் துப்பாக்கி முனையில் அவர்களின் பதட்டத்தை நாங்கள் பாத்திரங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
தயாரிப்பு: கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ்
இசை: கே
ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பார்த்திபன்
இயக்கம்: சோமீதரன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
இரண்டு மணி நேரக் கூட இல்லாத திரைப்படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்து இசை கோர்த்து எடிட்டிங் செய்திருக்கின்றனர்.. ஒவ்வொருவரும் தங்கள் பணிகளில் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
எல்லா போர்களும் எல்லா பிரச்சனைகளும் வன்முறையில் முடியாது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று அதை இங்கு வெளிப்படுத்த முடியாது.. அதை நீங்கள் நேரில் பார்த்தால் மட்டுமே அந்த உணர்வை பெற முடியும் என திரையில் இந்த நீளிராவை பார்த்து கண்டு களியுங்கள்..

