திருமதி லதா ரஜினிகாந்த் – தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ் கே எஸ் – S K S’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா – அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘எஸ் கே எஸ் – S K S ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நட்சத்திர நடிகருமான லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் Dr. சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே எஸ் திரைப்படத்தில் Dr. சாய் பிரபா மீனா, தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். M.C. பால்பாண்டி – ஜூஜூ மற்றும் முத்து ( JuJu & Muthu ) ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனீஷ் – அலெக்ஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். நந்தகுமாரன் கலை இயக்கத்தை கவனிக்க நவீன் குமார் , எஸ் டி ராஜ் மற்றும் வினோத் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் & எஸ் பி எம் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அண்ணா ஆஷா & சாய் ஷரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். எம்.ரேணுகா- கே. ரமேஷ் – ஆனந்தி குணா – டி ஜே டவுன் பிரேம் – நெல்சன் – சாய் தீபா – எம்.பி. பீர் முஹமது – ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படம் பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இன்றைய சூழலில்… ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை நம்பாமல் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய வழிமுறைகளை பற்றி அவர்களே சுயமாக சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அழுத்தமாக விவரித்திருக்கிறோம்” என்றார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

