தொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்!
சென்னை, மார்ச் 13, 2026: ஜேப்பியார் பல்கலைக்கழகம் சார்பில் ’தொழில்துறைக்குள் வளாகமா அல்லது வளாகத்திற்குள் தொழில்துறையா?’ என்ற தலைப்பில் ’Jeppiaar Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னணி கல்வியாளர்கள், தொழில்துறையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், மனிதவள நிபுணர்கள் மற்றும் புதுமையாளர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
கல்வி அறிவையும், தொழில்துறை அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் கற்றல் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம். இதுமட்டுமல்லாது தொழில்துறையுடன் இணைந்த பாடத்திட்டங்கள், அனுபவ அடிப்படையிலான கற்றல், திறன் மேம்பாடு, புதுமையான சூழல் மற்றும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நடைமுறைகள் ஆகியவை குறித்தும் இந்த விவாதம் இருந்தது.
ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் டாக்டர் ரெஜின்னா ஜே. முரளி தலைமையேற்று இந்த நிகழ்வை நடத்தினார். கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கிடையேயான இணைப்பு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவர் வலியுறுத்தினார். வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் அலுவலக சூழல்களுக்கு ஏற்ப வருங்கால பட்டதாரிகளை உருவாக்க பல்கலைக்கழகங்கள் தொழில் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வட்டமேசை நிகழ்வில் பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் குளோபல் டேலண்ட் பார்ட்னர் ராஜேஷ் சுவாமிநாதன், அனுபவம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் இந்த்வின் ஜோயல், ஈசி க்ரூப் நிறுவனத்தின் ஈவிபி டேனியல் ஜேக்கப், கன்சாலிடேட்டட் அனலடிக்ஸ்- குளோபல் நிறுவனத்தின் சீஃப் ஆப்பரேஷஸ் ஆபிசர் டேனியல் மகிமைராஜ், நோக்கியா நிறுவனத்தின் டேலண்ட் அட்ராக்ஷன் லீடர் & பிராண்ட் அட்வகேட் திருக்குமரன் ஆர்., இண்டெலெக்ட் டிசைன் அரெனா நிறுவனத்தின் சீஃப் டிசைன் ஆபிசர் டாக்டர் அன்பு ரத்தினவேல், வாகென் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர்- ஹெச்ஆர் சரத் சந்தர் எஸ்., சக்சஸ்வெர்ஸ் நிறுவனத்தின் டைரக்டர் டாக்டர் அன்புத்தம்பி பி., மல்டிகோர்வேர் நிறுவனத்தின் சிஹெச்ஆர்ஓ சஷிகாந்த் ஜெயராமன், டெக்னிக்கல் கன்சல்டண்ட் ஜார்ஜ் எஸ். கிறிஸ்டோபர், எண்டர்பிரைஸ் விஷனரி, அக்ரிபிரனர் & ஆதர் சதீஷ் ராஜா ரத்னம், ப்ரோடாப்ட் நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரேடெஜிக் ஹயரிங் விஜயன் ஆர்., இலுமேனி நிறுவனத்தின் சிஹெச்ஆர்ஓ சாம் ஜெகன்பால் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
மேலும், உயர்கல்வி துறையின் சிறப்பு கல்வியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ரீட்டா ஜான், நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னிக்கல் டீச்சர்ஸ் டிரைனிங் அண்ட் ரிசர்ச் (NITTTR) சென்னையின் ஈசிஈ துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி. குழந்தைவேல், ரிசர்ச்சர் மற்றும் இன்னோவேஷன் எகோசிஸ்டம் மெண்டர் டாக்டர் சுந்தரம் சேஷாத்ரி, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் டீன் டாக்டர் ஆர். பி. ராயா, கிருஷ்ண விகாஸ் குளோபல் யுனிவர்சிட்டி துணைவேந்தர் நரசிம்மலு யக்கலா, ஸ்ரீநிதி இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜியின் சிஹெச்ஆர்ஓ டாக்டர் ஆஷிஷ் மிட்டல்,மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பிரின்சிபல் டாக்டர் பால் வில்சன், VISTAS துணைவேந்தர் டாக்டர் டி. சசி பிரபா, ஜாய் யுனிவர்சிட்டி துணைவேந்தர் டாக்டர் வைபவ், ஷிவ் நாடார் யுனிவர்சிட்டி துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கே. பட்டாசார்யா, அண்ணா யுனிவர்சிட்டி ஐகியூஏசி இயக்குநர் டாக்டர் கே. வி. ராதா, பி. எஸ். அப்துர் ரஹ்மான் இன்ஸ்டியூட் கரியர் டெவலப்மெண்ட் இயக்குநர் டாக்டர் கணேஷ் கே., SRMIST கரியர் செண்டர் இயக்குநர் டாக்டர் வெங்கட சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்வியில் புதுமை, தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மாற்றங்களுக்கு தயாரான கற்றல் சூழலை உருவாக்குவதை ஜேப்பியார் பல்கலைக்கழகம் இந்த முயற்சி மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மாணவர்கள் எதிர்கால உலக பொருளாதாரத்தில் வெற்றி பெற தேவையான திறன்களுடன் உருவாகும் கல்வி சூழலை ஏற்படுத்துவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

