போலீஸ் ஃபேமிலி – விமர்சனம்…
கதை…
வாலிபர் ஒருவரை கஞ்சா கடத்தல் வழக்கில் காதல் சுகுமார் உள்ளிட்ட போலீஸ் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.. அவர் மீது வழக்கு போட்டு ஒப்புக்கொள்ள சொல்கின்றனர் ஆனால் அவர் மறுக்கிறார்.. ஒரு கட்டத்தில் மயக்கம் அடைந்து மரணம் அடைகிறார்..
அவர் பெரிய தாதா சரவணன் மகன் என தெரிய வருகிறது.. எனவே அவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தால் பிரச்சனை என்பதால் அவரைக் ஒரு காட்டின் மையப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.
மகனின் மரணம் அறிந்த சரவணன் மரணத்திற்கு காரணமான நான்கு போலீசையும் பழித் தீர்க்க நினைக்கிறார்.
போலீஸ் அதிகாரிகளும் நாங்கள் கொல்லவில்லை என்கின்றனர்.. குற்றவாளி யார் என சரவணன் கேட்க அவர்களுக்கு பதில் தெரியவில்லை..
இந்த சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது.? நிஜமாகக் கொன்றது யார் என்பதெல்லாம் சுவாரசியமான கதை..

நடிகர்கள்…
1. Raja Malaisamy as S I Raja Hero
2. Paruthiveeran Saravanan AS Dhana Villain
3. Nisha Dubey AS Anitha– HEROINE
4. Sureka R AS Viji Daughter
5. Kadhal Sukumar AS Suresh Ettu
6. Rojan Leon as Karthi – Anti HERO
7. Rathinam AS Inspector Kannan
8.Doss Santhakumar AS MLA Murthy
9. MS Selva as Kalli – Villains Assistant
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மிரட்டல் ஆன வில்லன் வேடத்தில் நடித்த அசத்திருக்கிறார் சரவணன்.. போலீசை மிரட்டும் காட்சிகள் வேற லெவல்..
அப்பாவி போலீசாக காதல் சுகுமார்.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் கேரக்டர் பெரிய திருப்புமுனை.. ஆனால் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கலாம்..
இவருடன் நடித்த மற்ற போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பக்குவப்பட்ட நடிப்பில் கவர்கின்றனர்.. மேலும் நாயகிகளும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
1. PRODUCTION HOUSE :ON THE TABLE PRODUCTIONS
2. PRODUCED BY -.Malaisamy A M Raja
3. WRITTEN & DIRECTED BY -Balu .M
4. DOP -Jayakumar Thangavel
5. EDITOR – M S Selva
6. ART – Mohan
7. MUSIC – Jaya K Doss
8. LYRICS -Mahamuni and So Pa Vasanth
9. STUNTS – Dragon Josh
10. COSTUMER – SELVAM
11. PRO – John A
படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.. பட்ஜெட் குறையால் தரத்தை எதிர்பார்க்க முடியவில்லை..
பெரும்பாலும் ரவுடிகளை தான் போலீஸ் பழி தீர்க்க நினைப்பார்கள்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க போலீசை பழிவாங்க வில்லன் சரவணன் ஆடும் ஆட்டம் தான் இந்த போலீஸ் ஃபேமிலி.. ஆனால் சரவணன் பங்களிப்பை விட அவரது அடியாட்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றனர்..
கொலையாளி யார் என்ற படபடப்புடன் திரைக்கதை முழுவதுமாக நகர்கிறது..
நேர்மையாக நடந்தால் வாழ்க்கையில் எந்த பயமும் இல்லை.. ஆனால் நாம் பழி தீர்க்கும் எண்ணம் கொண்டால் அந்த பழியே நம்மை அழித்துவிடும்.. அதற்கு மாறாக மன்னிப்பு வாழ்க்கையில் நிம்மதியை கொடுக்கும் என்ற சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலு..

