வடம் – விமர்சனம்
கதை…
அப்பா நரேன்.. மகன் விமல் இவர்கள் இருவரும் மாடுகளை வளர்ப்பதில் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்வது என ஆர்வம் காட்டி வருகின்றனர்.. அப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு கண் பார்வை இல்லாத பாண்டி முனி என்ற மாட்டை நட்டி வேண்டாம் என வெறுத்து விடுகிறார்..
இதனையடுத்து அந்த மாட்டை வாங்கி பாசமுடன் வளர்த்து வருகிறார் விமல்.. அது பல போட்டிகளில் பங்கேற்று விமலுக்கு பெயரை பெற்று தருகிறது.. இதனை அறியும் நட்டி பாண்டி முனி மாடு மீண்டும் வேண்டும் என கேட்கிறார்.. இதனால் இருவருக்கும் பிரச்சினை வருகிறது.
அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்…
விமல், நட்டி நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்..
பெரும்பாலும் விமல்க்கு கிராமத்து கேரக்டர்கள் பொருந்தி போகிறது.. இதில் ஜல்லிக்கட்டு காளை வீரன் போல துள்ளி ஆடி இருக்கிறார்.. இரண்டாம் கதாநாயகன் போல நட்டி அவரது கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்..
நாயகி சனா ஸ்ரீ வழக்கமான ஹீரோயின் போல பாடல் வந்து செல்லாமல் கதைக்கும் கேரக்டருக்கும் நியாயம் சேர்த்திருக்கிறார்.
பால சரவணன் காமெடி நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறது.. முனீஸ் காந்த் வித்யாசமான கேரக்டரில் ஜொலிக்கிறார்.. மதுசூதனன் மற்றும் தீபா உள்ளிட்டோரின் கேரக்டர்கள் பலம்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசை: டி இமான்
ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ் குமார்
கிராமத்து பின்னணி இசையில் பாடல்கள் இதம்.. முக்கியமாக ஜல்லிக்கட்டு காட்சிகளில் இமானின் இசை வேற லெவல்..
படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.. காட்சிகள் அருமை
இயக்கம்: கேந்திரன் வி
தயாரிப்பு: ராஜசேகர் ஆர்
கேந்திரன் இயக்கி இருக்கிறார்.. வழக்கமான கிராமத்து கதைகள் மாடுகளின் பெருமையை போற்றி இருக்கிறார்.. மாடு மனிதன் வாழ்வில் ஒரு இன்றியமையாத ஒன்று என்பதை உணர்வுப்பூர்வமாக காட்டி இருக்கிறார்..
