ஓ பட்டர்பிளை – விமர்சனம்
கதை…
ஒரு மலைப்பகுதிக்கு தன் கணவரோடு செல்கிறார் நாயகி நிவேதா சதீஷ்.. இவர்கள் அங்கு தங்குகின்றனர்.. அப்போது கணவர் அங்கே தன் பள்ளி நண்பர் ஒருவரை சந்திக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருகின்றனர்.
அப்போது நிவேதா அதிர்ச்சி ஆகிறார்.. ஏனென்றால் தன் கணவர் அழைத்து வந்த நண்பர் இவரின் முன்னாள் காதலன்.
அதன் பின்னர் அந்த வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப்பட மீதிக்கதை..

நடிகர்கள்…
நிவேதா சதீஷ் கதையின் நாயகியாக இவரை சுற்றியே கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது ஒரு பக்கம் கணவர் அடுத்த பக்கம் தனது முன்னாள் காதலன் இருவருக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் முகபாவனைகளை உணர்ச்சிபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார்.
முன்னாள் காதலனாக சிபி.. ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.. முன்னாள் காதலியை பார்த்து ஏங்கும் கேரக்டர்..
நாயகியின் கணவராக அதுல்.. குடிகார கொஞ்சம் சைக்கோ கலந்தவராக நடித்திருக்கிறார்..
இவர்களுடன் முக்கிய கேரக்டர் நாசர் & கீதா கைலாசம் உள்ளிட்டோரும் படத்தின் கேரக்டருக்கு உதவி இருக்கின்றனர்.. துறவி போல பெண் கேரக்டரில் லட்சுமி பிரியா..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
வைசாக் சோமநாத் இசையில் பாடல்களை விட பின்னணி இசை ரசிக்க வைக்கிறது..
ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன்.. பெரும்பாலும் ஒரே வீட்டிற்கு கதையை நகர்த்தி இருப்பது ஒளிப்பதிவாளர் மெனக்கடலை தெரிய வைக்கிறது..
படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன்.. விறுவிறுப்பு போட்டிருக்கலாம் ஆனால் திரைக்கதையில் வேகம் அப்படி..??
வண்ணத்துப்பூச்சி வைத்து சில காட்சிகளை நகர்த்தி இருப்பதும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் சிறப்பு.. கிளைமாக்ஸ் காட்சியில் வண்ணத்துப் பூச்சியின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது..
விஜய் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருக்கிறார் ஒவ்வொரு செயலும் வாழ்க்கையில் நடப்பது தற்செயல்தான் அது சில நேரங்களில் திட்டமிட்டபடி நடக்காமல் போகலாம் என்பதை வண்ணத்துப்பூச்சி கேரக்டர் மூலம் உணர்த்தி இருக்கிறார்..
