கள்ளன் பட விமர்சனம்

1985களில் நடக்கும் கதைக்களம். நாயகன் கரு.பழனியப்பன் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் காட்டில் வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் வேட்டைத் தொழிலுக்கு வனத்துறை தடை போட, திருட்டு, கள்ளத் துப்பாக்கி தயார் செய்து கொடுப்பது என தொழிலை மாற்றிக் கொண்டவர்களை ஒருகட்டத்தில் போலீஸ் பொறி வைத்து பிடிக்கிறது.
முதல் குற்றவாளியான கரு பழனியப்பனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கிறது. இதற்கிடையில், எதேச்சையாக நாயகி நிகிதாவை சந்திக்கும் கரு.பழனியப்பனை காதல் தீ பற்றிக் கொள்ள…நிகிதாவுக்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வரும் அவர், சிறையில் இருந்து தப்பிக்க திட்டமிடுகிறார். சிறையில் கிடைத்த புதுக்கூட்டா
ளி நமோ நாராயணனோடு கரு.பழனியப்பனும் அவரது கூட்டாளிகளும் சிறையில் இருந்து தப்பி மீண்டும் கொள்ளையடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.
இதன்பிறகு கரு.பழனியப்பனின் காதல் என்னவானது? காவல்துறை அவர்களை விட்டு வைத்ததா? என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லாத மீதிக் கதை.
நாயகன் கரு.பழனியப்பன் வேட்டைக்காரன் கேரக்டரில் இயல்பு காட்டுகிறார். நாயகி நிகிதா, தனக்கு கிடைத்்த பாத்திரத்துக்கு நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார்.
நமோ நாராயணன் மற்றும் செளந்தர்ராஜா பொருத்தமான தேர்வு. குறிப்பாக சண்டைக் காட்சியில் செளந்தர்ராஜா அசரடிக்கிறார்.
கூட்டாளிகளாக தோன்றிய அனைவரும் கதைக்கேற்ற மாந்தர்களாக மாறி கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் பெரிதும் கவர்ந்தவர் மற்றொரு நாயகி மாயா. எதிர்பார்க்காத நேரத்தில் கதைக்குள் இவரால் ஏற்படும் திருப்பம் கதையை விறுவிறுப்பாக்கி விடுகிறது.
வேல.ராமமூர்த்தியில் இருந்து ஆரம்பிக்கும் கதை நகர்வு அழகான கிராமத்து வேட்டை வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது. அதற்காகவே இயக்குனர் சந்திரா தங்கராஜ் பாராட்டுக்குரியவர்.
ஒளிப்பதிவாளர்கள் எம் எஸ் பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவரினி கேமராக்களும் மாயாஜாலம் நிகழ்த்துகிறது. ஜெயிலில் இருந்து கரு.பழனியப்பன் அண்ட் கோ தப்பிக்கும் காட்சியின் பரபரப்பில் கேமராவுக்கும் பெரும் பங்குண்டு.
கே இசையில் பாடல்கள் ரசனை. குறிப்பாக ’எத்தனை இரவு காத்திருந்தேன்’ என்ற பாடல் இசைப்பொக்கிஷம்..
எடுத்துக் கொண்ட கதையை நேர்கோட்டில் சொல்லி ரசிகனை 1985 கால் கட்டத்துக்கே கொண்டு சென்ற இயக்குனர் சந்திரா தங்கராஜ், தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரவு.
