காதல், காமெடி படங்களை தொடர்ந்து டைரக்டர் எழிலின் அதிரடி ஆக்ஷன் படம் ‘யுத்த சத்தம்’
![]()
இதுவரை காதல், காமெடி படங்களை இயக்கி வெற்றி வலம் வந்த டைரக்டர் எழில் முதன்முறையாக ‘யுத்த சத்தம்’ என்ற அதிரடி ஆக்–ஷன் படத்தை இயக்கியிருக்கிறார். பார்த்திபன்-கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படம் ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. நாயகியாக சாய் பிரியா நடிக்க, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், ரோபோ சங்கர், காமராஜ், மதுஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஸ்வின் நடித்துள்ளனர்.
டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு. கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு. சுகுமார் கலை இயக்கம். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர்.Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
திரை வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசுகையில், ‘‘டைரக்டர் எழிலுடன் தொடர்ந்து வேலை செய்வது இனிமையான விஷயம், எந்த கவலையுமில்லாமல் வேலை செய்வோம். வேறொரு பாணியில் இப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். சவுண்ட் மூலம் இயங்கும் ஒரு டிரக்கை அடிப்படையாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென ஒரு தீமை உருவாக்கியுள்ளோம். பார்த்திபன் திரையில் அற்புதமான நடிப்பை தந்துள்ளார், கௌதம் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள், படத்தில் பணிபுரிந்துள்ள அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
நாயகி சாய் பிரியா பேசியது…
இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். இயக்குநர் எழில் முதல் முறையாக வித்தியாசமான பாணியில் படம் செய்துள்ளார், அதில் நானும் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. பார்த்திபன் சாருடன் எனக்கு காட்சிகள் அதிகம் இல்லை, ஆனால் படப்பிடிப்பில் இருக்கும்போது நிறைய அறிவுரை தந்தார். நான் இமான் சாரின் மிகப்பெரிய ஃபேன் அவர் பாடலில் நடித்தது பெருமை.’’
இயக்குநர் பார்த்திபன் பேசியது…
எழில் அவரோட எல்லாப்படத்திலேயும் எல்லா காட்சியிலும் காமெடி இருக்கணும்னு நினைக்கிறவர். நான் ராஜேஷ்குமாரின் மிக தீவிர ரசிகன் அவர் நாவலை வாங்கி ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார். இமான் போதை தரும் இசையை தருபவர் இதில் போதையையே இசையாக தந்துள்ளார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.’’
மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது…
எழிலுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பணிபுரிகிறேன். இந்தப்படத்தில் நான் தான் வேணும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டு என்னை படத்துக்குள் கொண்டு வந்தார். எழில் படங்கள் எப்போதும் ஈஸியாக இருக்கும், இப்படம் முதல் முறையாக திரில்லர், கதையை பல முறை சொல்லி விளக்கி காட்சி அமைக்க சொன்னார்கள். அதை கேட்ட பிறகு கதை என்ன கேட்கிறது என தெளிவாக புரிந்தது. கிளைமாக்ஸ் மட்டும் 7 நாட்கள் எடுத்தேன். மிக நீண்ட உழைப்பை இந்த படம் வாங்கியது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.’’
இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “தீபாவளி படத்திலிருந்து எடிட்டர் ரோபோ முதல் நான் வரை எல்லோரும் எழில் சாருடன் இருக்கிறோம். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க வேண்டும், என்று கற்றுக்கொண்டது எழில் சாரிடம் தான். எந்த விசயத்தையும் கூலாக சமாளிப்பார். ஒருவரின் திறமையை மதிக்க தெரிந்தவர் எழில் சார், சூரி ரோபோ சங்கர் திறமையை கணித்ததால் தான் தீபாவளி படத்தில் நடிக்க வைத்தார். நான் பார்த்திபன் சாருடன் மாவீரன் கிட்டு படத்தில் வேலை பார்த்தேன். எழில் சாரும் பார்த்திபன் சாரும் வேறு மாதிரி வேலை பார்ப்பவர்கள் எப்படி ஒன்றாக படம் செய்யப்போகிறார்கள் என ஆர்வமாக இருந்தது. இந்த படத்தில் கலக்கியுள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் எழில் பேசியது….
நாம் எடுத்துக் கொண்டிருந்த படங்களில் இருந்து ரொம்ப தூரம் வந்துவிட்டோமே என யோசித்து, வேறு மாதிரி ஒரு படம் செய்யலாம் என முடிவு செய்தபோது, ராஜேஷ்குமாரின் இந்த நாவல் குறித்து தெரிய வந்தது, முருகேஷ்பாபு அந்த நாவலை மிக அழகான திரைக்கதையாக மாற்றினார். இந்தப்படம் எடுக்கலாம் என முடிவு செய்த போது இமான் ஹாலிவுட் படமான ‘இர் ரிவர்ஸிபள்’ பட சவுண்ட் ஒன்றை காட்டினார் அது படத்திற்கு பொருத்தமாக இருந்தது. படத்தின் கடைசி 20 நிமிடத்தை எடுப்பது மிக சவாலாக இருந்தது. பார்த்திபனுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவம். நிறைய கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை தரும், அவர்கள் இன்னும் நல்ல திரைப்படங்களை தருவார்கள். படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள் எல்லோருக்கும் நன்றி.
நடிகர் ரவி மரியா பேசியதாவது….
நான் நன்றி சொல்ல வேண்டிய மேடை, கரடுமுரடான என்னை காமெடி பீஸ் என என்னை மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில் தான். இன்று என்னால் குணசித்திரமும் செய்ய முடியும் காமெடியும் செய்ய முடியும் என அனைவரும் எனக்கு வாய்ப்பு தருவதற்கு அவர் தான் காரணம், அவருக்கு வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனதை கலக்கும் காதல் படங்கள் செய்தவர் மனம் கொத்தி பறவையில் காமெடியில் தன்னை நிரூபித்தார். அதே போல் இந்தப்படத்திலும் அவர் ஜெயிப்பார்.
இயக்குநர் RK செல்வமணி பேசியதாவது…
இந்தப்படத்தில் எல்லாமே பெர்பக்டாக இருக்கிறது. எழில் மிக டிசிப்ளினாக இருப்பவர். எந்த விசயத்திலும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார். படத்தில் அனைவருக்கும் முழு சுதந்திரம் தந்ததாக சொன்னார்கள் ஆனால் அவர் ஏதாவது ஒரு விசயம் தவறினால் அதை சரி செய்து விடுவார். பார்த்திபன் ஒரு ஜீனியஸ். அவர் சொல்லும் ஒவ்வொரு சிறு வார்த்தையிலும் பெரிய அர்த்தம் இருக்கும் என்றார்.
காதல், காமெடி படங்களை தொடர்ந்து டைரக்டர் எழிலின் அதிரடி ஆக்ஷன் படம் ‘யுத்த சத்தம்’
இதுவரை காதல், காமெடி படங்களை இயக்கி வெற்றி வலம் வந்த டைரக்டர் எழில் முதன்முறையாக ‘யுத்த சத்தம்’ என்ற அதிரடி ஆக்–ஷன் படத்தை இயக்கியிருக்கிறார். பார்த்திபன்-கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படம் ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. நாயகியாக சாய் பிரியா நடிக்க, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், ரோபோ சங்கர், காமராஜ், மதுஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஸ்வின் நடித்துள்ளனர்.
டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு. கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு. சுகுமார் கலை இயக்கம். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர்.Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
திரை வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசுகையில், ‘‘டைரக்டர் எழிலுடன் தொடர்ந்து வேலை செய்வது இனிமையான விஷயம், எந்த கவலையுமில்லாமல் வேலை செய்வோம். வேறொரு பாணியில் இப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். சவுண்ட் மூலம் இயங்கும் ஒரு டிரக்கை அடிப்படையாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென ஒரு தீமை உருவாக்கியுள்ளோம். பார்த்திபன் திரையில் அற்புதமான நடிப்பை தந்துள்ளார், கௌதம் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள், படத்தில் பணிபுரிந்துள்ள அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
நாயகி சாய் பிரியா பேசியது…
இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். இயக்குநர் எழில் முதல் முறையாக வித்தியாசமான பாணியில் படம் செய்துள்ளார், அதில் நானும் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. பார்த்திபன் சாருடன் எனக்கு காட்சிகள் அதிகம் இல்லை, ஆனால் படப்பிடிப்பில் இருக்கும்போது நிறைய அறிவுரை தந்தார். நான் இமான் சாரின் மிகப்பெரிய ஃபேன் அவர் பாடலில் நடித்தது பெருமை.’’
இயக்குநர் பார்த்திபன் பேசியது…
எழில் அவரோட எல்லாப்படத்திலேயும் எல்லா காட்சியிலும் காமெடி இருக்கணும்னு நினைக்கிறவர். நான் ராஜேஷ்குமாரின் மிக தீவிர ரசிகன் அவர் நாவலை வாங்கி ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார். இமான் போதை தரும் இசையை தருபவர் இதில் போதையையே இசையாக தந்துள்ளார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.’’
மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது…
எழிலுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பணிபுரிகிறேன். இந்தப்படத்தில் நான் தான் வேணும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டு என்னை படத்துக்குள் கொண்டு வந்தார். எழில் படங்கள் எப்போதும் ஈஸியாக இருக்கும், இப்படம் முதல் முறையாக திரில்லர், கதையை பல முறை சொல்லி விளக்கி காட்சி அமைக்க சொன்னார்கள். அதை கேட்ட பிறகு கதை என்ன கேட்கிறது என தெளிவாக புரிந்தது. கிளைமாக்ஸ் மட்டும் 7 நாட்கள் எடுத்தேன். மிக நீண்ட உழைப்பை இந்த படம் வாங்கியது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.’’
இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “தீபாவளி படத்திலிருந்து எடிட்டர் ரோபோ முதல் நான் வரை எல்லோரும் எழில் சாருடன் இருக்கிறோம். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க வேண்டும், என்று கற்றுக்கொண்டது எழில் சாரிடம் தான். எந்த விசயத்தையும் கூலாக சமாளிப்பார். ஒருவரின் திறமையை மதிக்க தெரிந்தவர் எழில் சார், சூரி ரோபோ சங்கர் திறமையை கணித்ததால் தான் தீபாவளி படத்தில் நடிக்க வைத்தார். நான் பார்த்திபன் சாருடன் மாவீரன் கிட்டு படத்தில் வேலை பார்த்தேன். எழில் சாரும் பார்த்திபன் சாரும் வேறு மாதிரி வேலை பார்ப்பவர்கள் எப்படி ஒன்றாக படம் செய்யப்போகிறார்கள் என ஆர்வமாக இருந்தது. இந்த படத்தில் கலக்கியுள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் எழில் பேசியது….
நாம் எடுத்துக் கொண்டிருந்த படங்களில் இருந்து ரொம்ப தூரம் வந்துவிட்டோமே என யோசித்து, வேறு மாதிரி ஒரு படம் செய்யலாம் என முடிவு செய்தபோது, ராஜேஷ்குமாரின் இந்த நாவல் குறித்து தெரிய வந்தது, முருகேஷ்பாபு அந்த நாவலை மிக அழகான திரைக்கதையாக மாற்றினார். இந்தப்படம் எடுக்கலாம் என முடிவு செய்த போது இமான் ஹாலிவுட் படமான ‘இர் ரிவர்ஸிபள்’ பட சவுண்ட் ஒன்றை காட்டினார் அது படத்திற்கு பொருத்தமாக இருந்தது. படத்தின் கடைசி 20 நிமிடத்தை எடுப்பது மிக சவாலாக இருந்தது. பார்த்திபனுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவம். நிறைய கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை தரும், அவர்கள் இன்னும் நல்ல திரைப்படங்களை தருவார்கள். படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள் எல்லோருக்கும் நன்றி.
நடிகர் ரவி மரியா பேசியதாவது….
நான் நன்றி சொல்ல வேண்டிய மேடை, கரடுமுரடான என்னை காமெடி பீஸ் என என்னை மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில் தான். இன்று என்னால் குணசித்திரமும் செய்ய முடியும் காமெடியும் செய்ய முடியும் என அனைவரும் எனக்கு வாய்ப்பு தருவதற்கு அவர் தான் காரணம், அவருக்கு வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனதை கலக்கும் காதல் படங்கள் செய்தவர் மனம் கொத்தி பறவையில் காமெடியில் தன்னை நிரூபித்தார். அதே போல் இந்தப்படத்திலும் அவர் ஜெயிப்பார்.
இயக்குநர் RK செல்வமணி பேசியதாவது…
இந்தப்படத்தில் எல்லாமே பெர்பக்டாக இருக்கிறது. எழில் மிக டிசிப்ளினாக இருப்பவர். எந்த விசயத்திலும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார். படத்தில் அனைவருக்கும் முழு சுதந்திரம் தந்ததாக சொன்னார்கள் ஆனால் அவர் ஏதாவது ஒரு விசயம் தவறினால் அதை சரி செய்து விடுவார். பார்த்திபன் ஒரு ஜீனியஸ். அவர் சொல்லும் ஒவ்வொரு சிறு வார்த்தையிலும் பெரிய அர்த்தம் இருக்கும் என்றார்.
