திரை விமர்சனம்

WILD TAMILNADU வைல்ட் தமிழ்நாடு விமர்சனம்..

WILD TAMILNADU என்ற ஆவணப்​படத்​தைச் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இதை நாடு முழு​வதும் உள்ள பி.​வி.ஆர் மற்​றும் ஐநாக்ஸ் திரையரங்​கு​களில் பொது​மக்கள் காணலாம்..

இந்த ஆவண படத்திற்கு தன்னுடைய குரலை பதிவு செய்திருக்கிறார் நடிகர் அரவிந்தசாமி.. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அவரது வாய்ஸ் அவர் இருந்தாலும் தமிழிலும் அவரது குரலே ஒலிக்கும் என தெரிவித்துள்ளனர்.. விரைவில் தமிழ் ஆவணப்படத்தையும் திரையில் காணலாம்..

இத்துடன் வைல்ட் தமிழ்நாடு போல தென்னிந்தியாவில் உள்ள கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வளங்களை இது போன்ற திரைப்படமாக வெளியிட உள்ளனர் என்பது கூடுதல் தகவல்..

இதில் வாழும் ஜீவராசிகள் அனைத்தையும் மக்களாகிய நாம் தான் பாதுகாக்க வேண்டும்.. வாயில்லாத ஜீவன்கள் என்று நாம் சில புழு பூச்சிகளை நினைத்தாலும் அதுதான் ஒரு காடு உருவாக காரணமாக இருக்கிறது.. காடு உருவாவதால் நாடும் வளமாக இருக்கும் என்பதை இந்த ஆவணப்படம் மூலம் உணரச் செய்திருக்கிறார் இயக்குனர்..

தமிழ் சங்க இலக்கியங்களில் நாம் படித்த ஐந்து வகையான நிலங்களை ஒவ்வொன்றாக விவரித்து அதன் மூலம் அதில் வாழும் உயிரினங்களை ஜீவராசிகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

குறிஞ்சி: மலையும் மலை சார்ந்த இடமும்…

முல்லை: காடும் காடு சார்ந்த இடமும்..

மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும்…

நெய்தல்: கடலும் கடல் சார்ந்த இடமும்…

பாலை: சுரமும் சுரம் சார்ந்த இடமும் (மணலும் மணல் சார்ந்த இடமும்)

நாம் தினம் தினம் பார்க்கும் யானை குருவி புழு பூச்சிகள் என எதுவாக இருந்தாலும் அவற்றின் வாழ்வியல் முறைகளை மிக நுட்பமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..

நீர் ஆகாரங்களை தேடி செல்லும் யானை கூட்டம் எப்போதும் ஒரு வழியை பின்பற்றி செல்லும்.. அது பல தலைமுறைகளாக அதே வழியை பின்பற்றுவதால் அடுத்தடுத்து அதன் குட்டிகளும் அவற்றை சார்ந்தே செல்லும் என்பதையும் ஒவ்வொரு காட்சியாக விவரித்து நம்மை வியக்க வைக்கிறார்..

மேலும் ஒவ்வொரு சிட்டுக்குருவியும் தன்னுடைய இருப்பிடத்தை எவ்வாறு கட்டுகிறது.. அதன் மூலம் ஒரு ஆண் பெண் குருவிகளுக்கு இடையே உள்ள பாசப்பிணத்தையும் காட்சி மூலம் விரிவுபடுத்தி உள்ளார்..

Each spiece has unique pulse

ஆக தமிழ்நாட்டில் உள்ள மிக அரிதான உயிரினங்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.. அந்த உயிரினங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்… அது வாழ்ந்தால் தான் நம்முடைய மனித இனமும் வாழும் என்பதை உணவு சங்கிலி மூலம் உணர்த்தி இருக்கிறார்..

சில மிருகங்களை நாம் வனவிலங்கு பூங்காவில் மட்டுமே காண்கிறோம்.. அழிந்து வரும் அந்த உயிரினங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.. இதை மாணவர்கள் மற்றும் நம் வீட்டுக்கு குழந்தைகளும் அனைவரும் பார்த்து மகிழ வேண்டும் வகையில் காட்சிப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார்..

ஒரு மணி நேர ஆவணப்​பட​மான இதை, ‘நேச்​சர் இன்ஃ​போகஸ்’ நிறு​வனத்​துடன் இணைந்​து, தமிழ்​நாடு வனத்​துறை​யின் ஒத்​துழைப்​புடன் பெரும் பொருட்செல​வில் சுந்​தரம் ஃபாஸனர்ஸ் தயாரித்​துள்​ளது.

இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்​குந​ரான கல்​யாண் வர்​மா இயக்கி உள்ளார்..

3 முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், பின்​னணி இசை அமைத்​துள்​ளார்..