விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் 4.5/5..
கதை…
மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் ராதிகா.. இவரது ஒரே மகன் சூர்யா.. தன் அம்மாவிற்கு அப்பா செய்த திருமண துரோகத்தால் திருமணத்தை வெறுக்கிறார் சூர்யா..
ஆனால் 42 வயதான பிறகு அம்மாவின் விருப்பப்படி தங்களின் பாரம்பரியமிக்க குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என நினைக்கிறார்.. ஆனால் அம்மாவுக்கே தெரியாமல் வாடகைக்கு தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து இந்தியாவுக்கு அழைத்து வருகிறார் சூர்யா..
அதன் பிறகு என்ன ஆனது மகனின் வாடகை தாய் விருப்பத்திற்கு ஆதரவு கொடுத்தாரா ராதிகா.? மமீதாவுக்கும் சூர்யாவுக்கும் என்ன உறவு என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை..
நடிகர்கள்…
சூர்யா – விஸ்வநாத்
மமிதா பைஜு – மேடி
ராதிகா – நிர்மலா தேவி
ரவீனா டாண்டன் – அஞ்சலி
கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியாக நம்மை கவர்ந்த சூர்யா இதில் சஞ்சய் விஸ்வநாத்தாக கவர்ந்திருக்கிறார்.. ஒரு பணக்கார பிசினஸ்மேன் அவரின் உடல் மொழி அவரின் மேனரிசம் என அனைத்தையும் அழகாக கொடுத்திருக்கிறார். அதே சமயம் திருமண பந்தத்தில் விருப்பமில்லாத ஒருவர் எப்படி பிளேபாயாக இருப்பார் என்பதையும் சுவாரசியமாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா..
ராதிகா இறந்த தருணத்தில் நம்மையும் அழ வைக்கிறார் THE One சூர்யா.. வாடகைத்தாய் மூலம் குழந்தை அதன் மூலம் வாரிசு என ஒரு பக்கம் நவீனமாக சிந்தித்தாலும் பழைய உறவு முறையை பாதுகாக்க வேண்டும்.. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு அருணாக இருக்க வேண்டும் என அனைத்தையும் சிறப்பாக நடிப்பின் மூலம் வெளிக்காட்டி இருக்கிறார் சூர்யா..
பல படங்களில் குடும்ப வேடங்களில் வந்தாலும் இதில் அரைகுறை ஆடையுடன் மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்களை மயக்கி இருக்கிறார் மமிதாபைஜு.. சுறுசுறுப்பான நடிப்பு துள்ளலான இளமையுடன் கலக்கியிருக்கிறார்.. வயதில் மூத்தவரை காதலிக்கும் கேரக்டர் என்றாலும் அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் மமீதாபைஜு..
பணக்கார குடும்பத் தலைவி பொறுப்பான அம்மா அன்பான மாமியார் என அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார் ராதிகா சரத்குமார்…
பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் வந்திருக்கிறார் நடிகை ரவீனா தாண்டன்… ஒரு பணக்காரனுக்கு இரண்டாவது மனைவியாக வந்தால் அவர் நிலைமை என்னாகும் அவரின் குழந்தைகள் நிலைமை என்னாகும் சமூகம் அவர்களை எப்படி பார்க்கும் என்பதை எதார்த்தமாக தன் கேரக்டர் மூலம் பதிவு செய்திருக்கிறார் ரவீனா…
கொஞ்ச நேரமே வந்தாலும் மரியம் ஜார்ஜ் வழக்கமாக நடிப்பின் மூலம் கண்கலங்க வைக்கிறார்.. பெற்றோர்களின் தொழிலை மதிக்காத மகன்களுக்கு இந்த காட்சி அர்ப்பணம்..
தொழில்நுட்பக் குழு…
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவீன் நூலி
ஜிவி பிரகாஷின் கடின உழைப்பு ஒவ்வொரு பாடலிலும் தெரிகிறது ஒவ்வொரு பாடலையும் வெரைட்டியாக கொடுத்திருக்கிறார்.. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து உணர்வுபூர்வமான இசையை கொடுத்திருக்கிறார்..
நிமிஸ் ரவி ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம்… பணக்காரர்களின் வாழ்க்கை முறை.. பிஸ்னஸ்மேன் வியாபார யுத்தி என அனைத்தையும் தன் ஒளிப்பதிவில் அழகாக படம் பிடித்திருக்கிறார்..
இந்தியாவில் அதிகம் அறியப்படாத வாடகைத்தாய் கான்செப்ட் வைத்து படத்தை முழுவதுமாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.. இவர் தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ஆவார்..
திருமணம் ஆகாத 42 வயது ஆண் அவரை காதலிக்கும் 22 வயது வாடகை தாய்ப்பெண் என சிக்கல் நிறைந்த உறவு முறையை இரண்டையும் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார்..
குழந்தையை பராமரிப்பதில் ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா? என்பதை கூட ஒரு சின்ன பட்டிமன்றம் போல நடத்தி கொஞ்சம் கலகலப்பு ஊட்டி இருக்கிறார்..
எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா
சண்டை பயிற்சி : V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
இரண்டு சண்டைக் காட்சிகள் தேவையற்றதாக இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக படமாய் இருக்கிறார்..
குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள்.. இதனால் குடும்பம் சிதையும் நிலைமை குடும்பத்தை ஒன்றிணைக்கும் முயற்சி என அனைத்தையும் சொல்லி சூர்யாவை மீண்டும் குடும்ப நாயகனாக அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர்

