திரை விமர்சனம்

வதந்தி 2 – இணையத் தொடர் விமர்சனம்…

கதை…

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி என்ற ஒரு வெப் சீரிஸ் வந்தது.. அந்த வெற்றியை தொடர்ந்து இது வதந்தி2.. இதில் போலீஸ் அதிகாரியாக சசிகுமார் நடித்திருக்கிறார்..

ஓர் அரசு நிகழ்ச்சிக்காக ஒரு பள்ளம் தோண்டப்படுகிறது.. அப்போது அங்கிருந்து ஒரு எலும்புகூடு கண்டுபிடிக்கப்படுகிறது.. அதில் ஒரு கை இல்லை.. அதன் பிறகு அடுத்த எலும்புககூடு கண்டு பிடிக்கப்படுகிறது..

இந்த எலும்புக்கூடு உருவம் யார் என விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் சசிகுமார்… இறுதியாக இரண்டும் பெண்கள் உடையது என்று தெரிய வருகிறது..

இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர்களை கொலை செய்து இங்கே புதைத்தவர் யார் என கொலையாளியை தேடி அலைகிறார் சசிகுமார்.

இறுதியில் என்ன ஆனது என்பதை பல மர்ம முடிச்சுகளுடன் சுவாரசியமாக திரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்..

நடிகர்கள்…

பல கிராமத்து படங்களில் மீசையை முறுக்கு வேட்டியை தூக்கி கட்டி என பல கெட்டப்பில் பார்த்திருக்கிறோம் சசிக்குமாரை.. இதில் முதல்முறையாக காக்கி உடை அணிந்திருக்கிறார்.. ஆனாலும் தாடியை எடுக்கவில்லை… அதில் அப்படி என்னதான் ரகசியமோ.? கமர்சியல் போலீசாக அல்லாமல் எதார்த்த போலீசாகவே தன் கேரக்டரை பிரதிபலிக்கிறார் சசிகுமார்..

சசிகுமார் மனைவியாக அபர்ணாதாஸ்.. பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த காட்சியில் சிறப்பு..

எஸ்.பி கதாபாத்திரத்தில் ஹீரோயின் அனகா.. காவல்துறை அதிகாரிக்கு கச்சிதமான பொருத்தம்.. நடிப்பிலும் கலக்கி இருக்கிறார்.. முதல் பாகத்தில் வந்த விவேக் பிரசன்னா இதிலும் இடம் பிடித்திருக்கிறார்..

முடக்கத்தான் மணி அறிமுக நடிகர் யஷ்வந்த், நான் மதுரைக்காரன் டா என மிரட்டியிருக்கிறார்.. இவரின் மனைவியாக ரேவதி என்பவரும் கவனிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி.. கிரைம் திரில்லர் கதைக்கு ஏற்ப விறுவிறுப்பை கொடுத்துள்ளார்..

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்.. இது போன்ற திரில்லர் படங்களுக்கு ஒரு பதட்டத்தை உருவாக்க இசையால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

வெப் சீரிஸ் என்றாலும் அதில் ஓவர் வன்முறை & ஆபாசம் எதுவும் இல்லாமல் ஒரு கிரைம் அதை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் பாஸ் மார்க் பெற்று இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.. அதுபோல ஒவ்வொரு எபிசோடும் நிறைவடையும்போது அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறார்..