தயாரிப்பாளர் திருமலை சிவம் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆகன்யா’. இப்படத்தை இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் – ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபல IT நிறுவனங்கள் மற்றும் மால்களில் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சியமைப்பிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் நாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இதில் சுப்ரா அய்யப்பா முழுநீள ஆக்ஷன் …
பிரம்மாண்ட க்ரைம் திரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ஆகன்யா’ – சுப்ரா அய்யப்பா, ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடிப்பு
